வாய்வு தொல்லை என்பது அனைத்து மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று தான். சில நேரங்களில் இது சிலருக்கு தர்ம சங்கடமான சூழலை கூட உருவாகிவிடும். நாம் வெளியேற்றும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால் நாம் நிச்சயம் அதை சரி செய்யவேண்டியது அவசியமாகிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, April 5, 2021
வாய்வு தொல்லை நீங்க இயற்கை வழிமுறைகளில் கை வைத்தியம்.. 📖✍🏻
நமது உடலில் இருந்து ஆசன வாய் வழியாக ஒருநாளைக்கு 15 முறை வாய்வை வெளியேற்றலாம். அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பால் சம்மந்தமான உணவுகள், முட்டை கோஸ், பட்டாணி, வெங்காயம், காலிஃபிளவர் போன்ற சில பொருட்களை அதிகம் உண்பதால் வாய்வு தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது. வாய்வு தொல்லையில் இருந்து விடப்பட தீர்வு என்ன என்பது குறித்து இயற்கை வழி மருத்துவம் கூறும் குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.
குறிப்பு 1 :
சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடி செய்து, காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.
குறிப்பு 2 :
துளசி சாறு மற்றும் இஞ்சி சாறை தலா மூன்று ஸ்பூன் எடுத்துக்கொண்டு காலை மாலை என இரு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வர வாய்வு தொல்லை நீங்கும்.
குறிப்பு 3 :
சுக்குமல்லி காபியை குடிப்பது, பூண்டு குழம்பு வைத்து மதியம் உண்பது, முடக்கத்தான் கீரையை வதக்கி சாப்பிடுவது போன்ற சில எளிய முறைகளை கொண்டும் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு 4 :
சாப்பிடும் சமயத்தில் பேசாமல் சாப்பிடவேண்டும். நாம் பேசிக்கொண்டே சாப்பிடுவதால் நம்மை அறியாமல் உணவோடு சேர்ந்து தேவைக்கு அதிகமான காற்றும் வயிற்றுக்குள் செல்கின்றது. அந்த காற்று மீண்டும் ஏப்பமாகவோ அல்லது ஆசன வாய் வழியாகவோ வெளியேறுகிறது. தேவை இல்லாமல் காற்று வெளியேறுவதை தவிர்க்க நாம் தேவை இல்லமால் காற்றை உட்கொள்ளாமல் இருந்தாலே போதும்.
குறிப்பு 5 :
எண்ணெய் சம்மந்தமான உணவுகளை தவிர்த்து வேகவைத்த உணவுகளை உண்பது, இரவு உணவை தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக உண்பது, பால் சம்மந்தமான பொருட்கள், இறைச்சி போன்றவற்றை குறைத்து, பச்சை காய் கறிகள் உண்பது, தினமும் நடை பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் வாயு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment