Saturday, July 29, 2017

ஓட்டு போட்ட மக்களுக்கு ஏதாச்சும் பண்ணுங்க சார்...இதுலயே அஞ்சு வருஷம் ஓட்டிடுவிங்க போல....

கட்சியை மீட்க தினகரன் முயற்சி- எடப்பாடி பழனிசாமி கலக்கம்.
அமைச்சர்களுடன் ரகசிய ஆலோசனை.
அ.தி.மு.க.வை மீட்போம் என்று தினகரன், திவாகரன் இருவரும் கூட்டாக அறிவித்திருப்பது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா-தினகரன் எதிர்ப்பை ஓ.பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி அணியினரே தற்போது வேகமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
சசிகலாவையும், தினகரனையும் ஒதுக்கி வைத்து விட்டு கடந்த 2 மாதங்களாக இவர்கள் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கட்சிக்குள் தினகரன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினால் அது தங்களது தன்னிச்சையான நடவடிக்கைகளை பாதிக்கும் என்று எடப்பாடியும், அமைச்சர்களும் கலங்கிப் போய் உள்ளனர்.
இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...