Tuesday, July 18, 2017

அமரர் கல்கியின் நேர்மை...

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம். பெரியாருக்கு அழைப்புக் கொடுத்ததும் நிச்சயம் வருகிறேன் என்கிறார். ஆனால் வரவில்லை. பிறகு, மதியமாக கல்கி வீட்டிற்கு வருகிறார் பெரியார். கல்கி, ஓடோடிச் சென்று வரவேற்கிறார். மணமக்களை வரச்சொல்லி ஆசிபெறச் சொல்கிறார்.
பெரியாரும் மணமக்களை வாழ்த்தி, அவர்கள் நெற்றியில் விபூதி குங்குமம் இடுகிறார். கல்கி தயக்கமாக காலையில் வராதது குறித்துக் கேட்க, ‘கல்யாணத்துல உங்க உறவினர்கள்லாம் இருப்பாங்க. அங்க நான் கறுப்புச் சட்டையோட வந்தா அவங்க விரும்ப மாட்டாங்க’ என்கிறார். பெரியாரின் பெருந்தன்மை கண்டு நெகிழ்கிறார் கல்கி.

அந்த வாரத்திற்கான கல்கி அட்டைக்காக பெரியார் குங்குமம் வைக்கும் புகைப்படத்தை எடுத்துவருகிறார்கள். கோபத்தில் கொதிக்கிறார் கல்கி.
“பெரியார் விபூதி இட்டது அவர் நம்பிக்கைக்காக அல்ல. நம் நம்பிக்கையை மதித்த அவரது பெருந்தன்மை. அதை விளம்பரப்படுத்தி இதழ் வெளியிடும் அற்ப புத்தி எனக்கில்லை!” என்று சொல்லி அந்தப் புகைப்படங்களைக் கிழித்தாராம்!
இது ஒரு அட்டைப்பட விவகாரம்தான், இதிலும் என்ன நேர்மை
திருந்தப் போவதில்லை என்று முடிவெடுத்தவர்களிடம் பேசிப் பிரயோஜனமில்லை!
படித்ததில் பிடித்தது....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...