Monday, July 31, 2017

#மாவட்ட_நிர்வாகிகளுக்கு_அழைப்பு!

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்றதாக கைதுசெய்யப்ட்ட போது 60 நாட்கள் பொறுத்திருங்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்ததாக கூறினார்.
தினகரன் அறிவித்த 60 நாட்களானது வருகின்ற 4 ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக ஆகஸ்ட் 5 முதல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், மீண்டும் கட்சிப்பணியில் ஈடுபட இருப்பதாகவும் தினகரன் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 5 ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பின்பு அதிமுகவின் உள்ள உட்கட்சி பூசல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...