Saturday, July 29, 2017

நம்ம நாட்டு மக்களை பற்றிய சில உண்மைகள்......

1. நம்ம நாட்ல இருக்குற ஒவ்வொரு கல்யாணம் ஆகாத ஆணும் ஒரு அழகான பெண்ணை கல்யாணம் பண்ணிக்கத்தான் ஆசைபடுறான்....
2. நம்ம ஊட்ல காலிங் பெல் சத்தம் கேட்டதும் நம்ம குழந்தைங்க இல்லனா கணவன் கதவை திறக்க ஓடுவோம்.. பெண்கள் தங்கள் துப்பட்டாவை தேடி ஓடுவார்கள்...
3. நம்ம சொந்தக்காரர்களை ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டான்ட் கூட்டிட்டு போறதும் அங்கிருந்து கூட்டிட்டு (pick-up / drop) வரதும் நம்ம குடும்பங்களின் ஒரு முக்கியமான சம்பிரதாய நிகழ்ச்சி.....
4. வீதி உணவுகளை வெறித்தனமாக வாங்கி சாப்பிடுவோம்... ஆனால் அதனால் நமக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என்பது பற்றி துளிகூட கவலை கிடையாது நமக்கு
5. ஒவ்வொரு இந்திய தாய்க்கும் இரண்டு தலையாய கடமைகள் உள்ளன... ஒன்று வேலைக்கு செல்வது (அல்லது ஹவுஸ் ஒய்ப்) இரண்டு அவர்களின் டிரஸ்களுக்கு மேட்சிங் செலக்ட் செய்வது ...
6. நம்ம எல்லாருக்குமே ரகசியமா ஒரு கேர்ள் / பாய் பிரண்ட் கட்டாயம் இருப்பாங்க...அவங்க நம்மள ஏமாத்தினாலும் அத பத்தி பெருசா கண்டுக்க மாட்டோம்.. ஆனா அப்பா அம்மாவுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சிட கூடாதுன்றதுல ரொம்ப கேர் புல்லா இருப்போம்....
7. பொண்ணுங்க கல்யாணம் முடிஞ்சு மாப்ள வீட்டுக்கு போகும் போது கண்டிப்பா கண்ணுல தண்ணி வச்சுக்கணும்... சந்தோசமா இருக்குறதா காட்டிக்கவே கூடாது
8. நமக்கு எவ்ளோ தான் வயசானாலும்... நாம எங்க போரம் வரோம்ங்கற detail எல்லாதையும் நம்ம அப்பா அம்மா கிட்ட சொல்லியே ஆகணும்.. No excuses. No exemption
9. நாம ஒருவேளை வெளியூர்ல இருக்கோம்னா தினமும் நம்ம அம்மாவுக்கு போன் பண்ணி பேசியே ஆகணும்... ஒரு நாள் பேசலைன்னாலும் உடனே நம்ம அம்மா ஊர்ல இருக்குற நம்ம பிரண்ட்ஸ் எல்லாருக்கும் போன் பண்ணி என்னச்சின்னு பதட்டத்தோட விசாரிப்பாங்க...
10. நம்ம அப்பா அம்மா எதிரிலே ஏதாவது அப்ளிகேசன் பாரம் நிரப்பிகிட்டு இருக்குறப்போ அதுல செக்ஸ் அப்படிங்கற வார்த்தை வந்துட்டாகூட ரொம்ப சங்கோஜமா பீல் பண்ணுவோம்.
11. வீட்டுக்கு வர்ற கெஸ்ட்கள் கூட நாம வீட்டுக்குள்ள இருந்து பேசுறத நேரத்தை விட அவங்க கிளம்பி வாசல் வந்தப்புறம் கதவுகிட்ட வச்சு பேசுறது தான் ரொம்ப ஜாஸ்தியாய் இருக்கும்.
இதெல்லாம் உண்மையிலேயே நீண்ண்ட ஆராய்சிக்கி பொறகு கண்டுபிடிக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்புக்கள் ........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...