Saturday, August 28, 2021

பகல் கனவு....எல்லாம் அவன் செயல்....

 தி.மு.கஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் மாற்றத்தைவிரும்பியவர்களுக்கு மகிழ்வை தந்தது. ஆக்கப்பூர்வமான நடைமுறைகளை செயல் படுத்துவார்கள் என்று பாமரமக்கள் கனவு கண்டநேரத்தில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். அதில்முக்கியமானது. ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டரை லட்சம் கடன் இருக்கிறது. என்று.மக்கள் திகைத்து போயினர்.கடன் இவ்வளவு இருக்கும்போது அவற்றை அடைக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது.இந்தநிலையில் ரூ.39கோடியில் முன்னால் முதல்வர் கருணா நிதிக்கு நினைவிடம் மெரினா கடற்க்கரையில் நினைவிடம் 2,21 ஏக்கரில் நினைவிடம், ..எழுப்ப இருக்கிறார்கள். கருணாநிதிஐந்துமுறை முதல்வராக இருந்திருக்கிறார்.அவருக்கு நினைவிடம் ஏற்கனவே மெரினாவில் உள்ளது. அவரைஅறியாதவர்கள் யாரும்இல்லை.அப்புறம் சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ500கோடி ஒதுக்கீடு. இப்படி பல திட்டங்களை அறிவிக்கப்பட்டிருக்கிறது.எல்லாம் சரி. ஆனால் வருடாவருட. அடித்தட்டுமக்கள் வாழ்க்கை மழைக்காலங்களில் இருக்க. இடமில்லாமல் அகதிகளை போல தவிப்பதை தவிர்க்க. நடுத்தரமக்களின் வாழ்க்கை மேம்பட கவனம் செலுத்தவேண்டியது ஆட்சியாளர்களின் முதல் கடமையாகும்.நிறைய.மக்கள்நலனுக்கான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பணிகளை நிறைவேற்றுவது அதிகாரிகளியின் கையில். தேன்எடுப்படுபவர்கள் புறங்கையை நக்காமல் இருந்தார்களானால் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் புகழ் ஆராத்தை மக்கள் சூட்டுவர் என்பது திண்ணம்.மக்கள் நலனுக்காகத்தான் ஆட்சி. சொந்தபந்தங்களை நிலைநிறுத்துவது அல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்குக்காக பாடுப்பட்டால் உலகம் உள்ளளவும் போற்றப்படுவார்கள்.

மேலெழுந்த வாரியாக பார்க்க நம்பிக்கைத் தருகிறது, இதன் பலன்கள் நடைமுறைக்கு வரும்போது தான், அதில் உள்ள சாதக பாதகங்களை உணரமுடியும் அதர்குக் குரைந்தது ஒர் ஆண்டு ஆகும், மேலும் இவர்கள் கடந்தகால ஆட்சி யின் தவறுகளை கண்டு பிடிக்க அதன் பின்னாலேயே சென்று கொண்டு இல்லாமல் மற்ற திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும், மற்றும் நிதித்துறை அமைச்சர் நிதி சம்பந்தமாக மெத்தப் படித்து மேலைநாடுகளில் பனியாற்றியவர் என்றெல்லாம் சொல்லப் படுகிறது, அவர் அரசின் கஜானாவை சரிசெய்ய தான் முனைப்பு காட்டுவதாகத் தெறிகிறது, அரசு ஊழியர்களின் சம்பளம் மக்களின் சேவைக்கு செய்யப்படும் செலவு என உணர வேண்டும், அது ஒரு உதவித் தொகை போன்ற எண்ணம் கொண்டுள்ளார் நிதியமைச்சர், எனவே நிதி பற்றாக்குறை என்பது எல்லா காலங்களிலும் இருக்கும், அதனை காரணம் காட்டி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்குக் கொரோனா காலத்தில்நிறுத்தி வைக்கப் பட்ட அவர்களின் நியாயமான நிலுவை யினை மற்ற மத்திய, மாநில அரசுகள் விடுவித்துல்லது போல் வழங்க வேண்டும், புதிய தாக எதையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை, கொடுக்க வேண்டிய நிலுவையை தர நிதியமைச்சர் முரன்படுகிறார், மந்திரிகள் MLA க்களுக்கான சலுகைகள் மட்டும் சுனக்கம் இல்லாமல் விடுவிக்கப் படுகிறது, முதல்வர் மற்ற எல்லாரும் விஷயங்களிலும் கருத்து கூறுகிறார், இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது வருத்தமளிக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...