Tuesday, August 31, 2021

தலைவரின் கணவர் 'பர்த் டே' கொண்டாட்டம் சர்ச்சையில் சிக்கிய துறையூர் யூனியன் 'ஆபீஸ்'.

 திருச்சி-துறையூர் யூனியன் அலுவலகத்தில் யூனியன் சேர்மனின் கணவர் 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


 தலைவரின் கணவர் 'பர்த் டே' கொண்டாட்டம் சர்ச்சையில் சிக்கிய துறையூர் யூனியன் 'ஆபீஸ்'
இதில் அரசு அதிகாரிகளும் பங்கேற்று வாழ்த்து கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம் துறையூர் யூனியன் சேர்மனாக தி.மு.க.,வைச் சேர்ந்த சரண்யா உள்ளார். இவரது கணவர் மோகன்தாஸ், 37. 'வீடியோ'தி.மு.க., பிரமுகரான இவர், நேற்று முன்தினம் தன் பிறந்த நாளை, துறையூர் யூனியன் அலுவலகத்தில் உள்ள யூனியன் தலைவர் அறையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதில், துறையூர் யூனியன் பி.டி.ஓ.,க்கள் சாமிநாதன், மணிவேல், யூனியன் கவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் சிலரும் பங்கேற்றனர். விதிமுறைக்கு புறம்பாக அரசு அலுவலகத்தில் தி.மு.க., பிரமுகர் பிறந்த நாள் கொண்டாடியதும், யூனியன் அதிகாரிகள் பங்கேற்று கேக் ஊட்டி, தி.மு.க., பிரமுகருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ மற்றும் 'போட்டோ'க்கள் சமூக வலை தளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

ஏற்கனவே பிளீச்சிங் பவுடர், மருந்தடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்காமலே, வாங்கியதாக மோசடி செய்ததாக, யூனியன் சேர்மன் சரண்யா மீது கூறப்பட்ட புகார் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிர்ச்சிஇதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், யூனியன் சேர்மன் கணவர் என்ற 'மமதை'யில் தி.மு.க., பிரமுகர் யூனியன் அலுவலக அறையில் பிறந்த நாள் கொண்டாடியது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...