Tuesday, January 31, 2023

கடன் தீர்ந்து பணம் சேர பூஜை அறையில் கல் உப்பிற்குள் இதை புதைத்து வைத்தால் போதும்!

 பண பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.**


ஏழைகளாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி அவர் அவர்களுக்கு வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்ப கடன்களும் அமையப் பெறுகிறது. கடன் இல்லாத மனிதனே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு கடன் பிரச்சனையானது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனையை உண்டு பண்ணி கொண்டே இருக்கும். இப்படி தொடர்ந்து கடன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். கடன் தீர்வதற்கான பரிகாரம் என்னவென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


கடன் பிரச்சனை சில சமயங்களில் கட்டுக்கு அடங்காமல் போய்க் கொண்டே இருக்கும். சரி, இனிமேல் கடன் வாங்காமல் இருந்து காட்டுவோம் என்று வைராக்கியமாக இருந்தாலும், ஏதாவது ஒரு சூழ்நிலை நம்மை கடன் வாங்க வைத்து விடும். இப்படி தொடர்ந்து கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தவிப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் இதிலிருந்து எளிதாக மீண்டு விடலாம் என்கிறது சாஸ்திரங்கள்.


கடன் தொகையை கொடுக்கும் பொழுது எப்பொழுதும் வெள்ளிக்கிழமையில் கொடுக்க வேண்டாம். என்ன பிரச்சினையாக இருந்தாலும், வெள்ளிக்கிழமையில் கடனை திரும்ப கொடுத்தால் திரும்பத் திரும்ப கடன் வாங்க வேண்டி இருக்கும். அது போல நீங்கள் கடன் வாங்கும் பொழுது குளிகை நேரம் கவனித்து வாங்குவது நல்லது. குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் மீண்டும் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று ஜோதிடங்கள் குறிப்பிடுகிறது.


குளிகை என்பது மீண்டும் மீண்டும் ஒரு காரியத்தை செய்ய தூண்டும் நேரம் ஆகும். இந்நாளில் நகை வாங்கினால் மீண்டும் மீண்டும் நாம் நகை வாங்குவோம். அதுபோல கடன் வாங்கினாலும் அப்படித்தான். எனவே இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். வெள்ளிக்கிழமை தோறும் பூஜை அறையில் ஒரு சிறிய பித்தளை அல்லது கண்ணாடி பவுலில் கல் உப்பை நிரம்ப போட்டுக் கொள்ளுங்கள். அதன் உள்ளே விரலி மஞ்சள் ஒன்றை புதைத்து வைக்க வேண்டும்.


விரலி மஞ்சளுடன் உப்பு சேரும் பொழுது அங்கு மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதே போல வசம்பு ஒன்றையும் இதே போல புதைத்து வைக்க வேண்டும். இந்த உப்பு நாள் முழுவதும் பூஜை அறையில் இருக்க வேண்டும். மறுநாள் இந்த உப்பில் இருக்கும் மஞ்சள் மற்றும் வசம்பை எடுத்துவிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ரெண்டு பொருட்களை மட்டும் ஒரு சிறிய மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.


இதுபோல ஒவ்வொரு வாரமும் நீங்கள் சேகரித்து வரும் மூட்டைகள் அதிகம் சேர்ந்ததும், நீர் நிலைகளில் கொண்டு போய் விட்டு விட வேண்டும். இதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. இப்படி தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் மட்டும் செய்து வாருங்கள், உங்களுக்கு இருந்து வந்த அத்தனை கடன் ரீதியான பிரச்சனைகளும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இப்பரிகாரம். இந்த எளிய பரிகாரத்தை செய்து சொர்ண ஆகர்ஷண பைரவர் அருளால் உங்கள் கடன் தொல்லையிலிருந்து எளிதாக மீண்டு விடலாமே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...