முன்னோர்களுக்கான வழிபாடு
மாட்டு பொங்கல் அன்று இந்த வழிபாடு செய்வதற்கான காரணம் அந்த காலத்தில் பொங்கல் அன்று அனைவரும் சேர்ந்து கொண்டாடுவார்கள். வெளியூரில் உள்ள தனது மகன் மகள்கள் அனைவரும் சொந்த ஊருக்கு வந்துதான் பொங்கல் கொண்டாடுவார்கள். சொந்த பந்தம் ஒன்றுகூடி இருப்பதால் மறுநாள் மாட்டு பொங்கல் அன்று நம் வீட்டில் இறந்த நம் முன்னோர்களை நினைத்து அனைவரும் சேர்ந்து வழிபாடு செய்வதோடு அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளையும் செய்து படைப்பர். அதானால் தான் முன்னோர் வழிபாடு மாட்டு பொங்கல் அன்று கொண்டாடுகின்றனர்.
அனைத்து வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளும் எங்கள் வீட்டு முன்னோர்களுக்காக நான் மட்டும் தனியாக செய்தேன். இதில் உள்ள ஏற்றிய விளக்கு என் மாமனாரின் அம்மா விளக்கு. 
நம் முன்னோர்களை வணங்க மறக்காதீர்கள். நம் குலதெய்வமே நம் முன்னோர்கள் தான்.நம் தலைமுறை சிறக்க முன்னோர் வழிபாடு அவசியம்.


No comments:
Post a Comment