திருமணமாகி இரு வருடங்கள் ஆகின்றன.
குடும்ப பிரச்சினையால் கணவர் என்னை தள்ளிவைத்துள்ளார்.
என் வீட்டார் அவர் கட்டிய தாலியை கழற்றி வீசிவிடும்படி வற்புறுத்துகிறனர்.
என்னால் முடியவில்லை.
நான் அவரை வெறுக்காமல் காத்திருக்கிறேன். எனது இந்த முடிவு சரியானதா?
வருடக்கணக்கில் காத்திருக்கும் வேலை எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது..

உங்கள் கணவர் மேல் உங்கள் வீட்டினர் தான் பெரும் பகையோடு இருக்கிறார்கள்..

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகளை இரண்டு வீட்டார்களும் சண்டை போட்டு பெரிய பிரச்சினை ஆகி காவல் நிலையம் வரை சென்று விட்டது.

இவர்கள் இருவரையும் சேர்ந்து வாழக் கூடாது என்று விவாகரத்து வாங்க முடிவு செய்து விட்டார்கள்..


இருவரும் பின்னர் மலரும் நினைவுகளை தாங்க முடியாமல் ஒன்று சேர்ந்து…
வெளிநாடு செல்ல தீர்மானம் செய்து விட்டனர்..
இரண்டு குடும்பமும் அடித்து கொண்டு என்னமோ செய்து தொலையுங்கள்
என்று தனிக்குடித்தனம் சென்று நிம்மதியாக இருக்கின்றனர்..

அல்லது கணவருக்கு மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பி விடுங்கள்..

நீ ஒழுங்காக வாழ்ந்து இருக்க வேண்டும் என்று உங்களை குற்றவாளியாக மாற்றி விடுவார்கள்.

உங்கள் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அல்லது முறையாக விவாகரத்து செய்து வேறு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்..
அதை விடுத்து பிறந்த வீட்டில் இலவு காத்த கிளியாக இருப்பது எல்லாம் வேலைக்கு ஆகவே ஆகாது..

அவர்கள் காலம் கடந்த பிறகு உங்களுக்கு என்று உடன் பிறந்தவர்கள் கண்டிப்பாக துணையாக இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
No comments:
Post a Comment