Friday, January 13, 2023

அஷ்டம சனி மற்றும் அர்த்தாஷ்டம சனி ஒரு சில விளக்கம்...

 சனீஸ்வரர் மகரம் ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பும் ஏற்படும்.

சனீஸ்வரர் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் அஷ்டம சனி காலமாகும்.
நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டம சனி காலமாகும்.
சனி பார்க்கும் இடம் பாழ் சனீஸ்வரர் பார்வை அத்தனை கொடூரமானது .
சனீஸ்வரரால் சிவபெருமானும் ராவணனும் பாதிக்கப்பட்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நவ கிரகங்களில் சனீஸ்வரரை பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்..
ஒரு கால் முடமான சனிபகவான் மெதுவாக நகர்ந்து செல்வார். ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகிறது..
சுபகிருது வருடம் தை மாதம் 3ஆம் தேதி ஜனவரி 17/2023 ஆன்று சனீஸ்வரர் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார்.. இந்த சனிப்பெயர்ச்சியால் அஷ்டம சனியால் பாதிக்கப்படும் கடகம் மற்றும் அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்..
கடகம் அஷ்டமத்து சனி....
அஷ்டம சனி வரப்போகிறது என்று யாரும் அச்சமடைய வேண்டாம் காரணம் கடக ராசிக்காரர்களுக்கு நிகழப்போகிற சனிப்பெயர்ச்சி அற்புதங்களை நிகழ்த்த போகிறது. கண்டக சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகள் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கறுத்துவேறுபாடு பிரச்சினை ஏற்படுத்தியது. சனி பகவான் எட்டாம் வீட்டில் அமர்வதால் நன்மையே செய்வார்..
குடும்பத்தில் கவனம்..
உங்க குடும்ப ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரபட்டு கொடுத்து விட்டு பின்பு அவதிப்பட வேண்டாம்..
பண முதலீட்டில் கவனம்..
வேலைகளை விடும் முன் ஒருமுறை இருமுறை யோசிக்கவும். புதிய தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். பண முதலீடுகளை செய்ய வேண்டாம். பேராசை பட வேண்டாம். பங்கு சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ கற்று கொள்ளுங்கள்.
May be an image of temple, outdoors and monument

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...