Saturday, January 14, 2023

திமுக தலைவர் கருணாநிதி பேசாத பேச்சுகளா ???

 திமுக கட்சியே நாரசமாக பேசக் கூடிய கட்சி என்பதை தமிழகம் நன்றாகவே அறியும் ..

திமுக கட்சியில் பேச்சாளர்கள் மட்டுமா மரியாதையின்றி தரக்குறைவாக எதிர்கட்சி அரசியல்வாதிகளை பேசினார்கள்
பேசுகிறார்கள்
( இனியும்
பேசுவார்கள் )..
திமுக கட்சித் தலைவர்களும்
அமைச்சர்களுமே கண்ணியமின்றி தரக்குறைவாக பேசும் போது
இந்த மாதிரி கழிசடை பேச்சாளர்களுக்கு திமுகவில் பஞ்சமேது...
திமுக தலைவர் கருணாநிதி பேசாத பேச்சுகளா ???
பரந்த விரிந்த பாரதத்தின் ஒரு அங்கமாக விளங்கும் தமிழகத்தில்
பொய்யுரைத்து
ஊழல்களில் உயிர் வளர்த்த இரு பெரும்
திராவிடக் கட்சிகளாக
திமுக , அதிமுக இருக்கையிலே
ஆட்சியில் இருந்த போதும் சரி
எதிர்க்கட்சியாக ஆட்சியை பிடிக்க நினைத்த போதும் சரி திமுக எதிர்கட்சி அரசியல்வாதிகளை பேசிய பேச்சுகளை காது கொண்டு கேட்க முடியாதளவிற்கு கொச்சைத் தனமாக
நீசத்தனமாக
அநாகரீகமாக
அருவருக்கத்தக்க
முகம் மனம் சுளிக்கக் கூடிய வகையிலே பேசிய பேச்சுகளை தமிழக மக்கள் மறக்க முடியுமா ????
இன்றைய இளசுகளுக்கு வேண்டுமானால்
தெரியாமல் போகலாம் அவர்களின் துர்வாடை அடிக்கும் பேச்சுகள் ..
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் என்பதற்காக பெண்ணென்றும்
பாராமல்
தாய் ஸ்தானத்தில் வைத்து மதிக்கக் கூடிய பெண்களை அவர்கள் வன்மமாக பேசிய பேச்சுகள் யாருமே மன்னிக்கக்கூடிய பேச்சுகளல்ல ..
தமிழக அரசியலில் சாக்கடை பேச்சுகளை வளர்த்த
திராவிடக் கட்சியில் முதலிடம் பிடிக்கும் பெருமை
திமுக கட்சி தலைவர் கருணாநிதிக்கே சேரும் ..
இரண்டாவது இடமே
பெரியார் ஈவேராக்கு சேரும் ..
அவ்வளவு கீழ்த்தரமான பேச்சுகள் ..
அதனால் அப்பாவிற்கு தப்பாமல் பிள்ளை
தமிழக ஆளுநரை
எவனோ ஒருவன் தமிழ்நாட்டை தமிழகம் தமிழகம் னு புலம்பிட்டு இருக்கானே என்று மேடையிலே
மரியாதையின்றி பேசியது
அதிசயமல்ல ...
தமிழகத்தின் முதன்மை மந்திரியாக இருந்து கொண்டு தமிழக ஆளுநரை மரியாதையின்றி அவன் இவன் என பேசுவது ஸ்டாலினுக்கு
பெருமையாக இருக்கிறது..
தலைவன் எப்படியோ
அப்படியே அக்கட்சி தொண்டர்களும் ..
தொட்டில் பழக்கம்
சுடுகாடு வரைக்கும் என்று
சும்மாவா சொன்னார்கள் ..
தமிழக அரசியல் வரலாற்றில்
திமுக ஆளும் போதும் சரி
எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி
கரும்புள்ளிகளே நிறைந்துள்ளது ...என்பது தமிழகத்திற்கு எப்போதுமே தலைகுனிவு தான் ..
திராவிடத்தை ஆதரிக்கும்
தமிழக மக்கள் திருந்தி தொலைக்காத வரை
இந்த அவமானம்
தொடர்கதை தான் ...
ஜெய்ஹிந்த்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...