Monday, September 30, 2019

அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு

'திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், ஏ.கே.போசுக்கு வழங்கிய, சின்னம் ஒதுக்கீட்டு படிவத்தில், ஜெயலலிதா பதிவிட்ட கைரேகை போலியானது' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், அ.தி.மு.க.,வை தடை செய்யக் கோரியும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., இன்று வழக்கு தொடர உள்ளது.கடந்த, 2016ல் நடைபெற்ற, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.

போலி






அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த, தி.மு.க., வேட்பாளர், டாக்டர் சரவணன், வழக்கு தொடர்ந்தார். அதில், 'போசுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் பதிவு செய்யப்பட்ட, ஜெயலலிதாவின் கைரேகை போலியாக உள்ளது. அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என, கோரியிருந்தார். இந்த வழக்கு நடந்த போது, போஸ் மரணமடைந்தார்.

வழக்கின் இறுதியில், சென்னை, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 'ஜெயலலிதாவின் கைரேகை, மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதால், அப்படிவத்தை, தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். 'வேட்புமனுவில் கைரேகை இடலாம் என, சட்டத்தைத் திருத்தி, கடிதம் வாயிலாக, தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது, சட்ட விரோதமானது. எனவே, போஸ் வெற்றி செல்லாது' என, கூறியிருந்தது.ஜெயலலிதா கைரேகை வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், போலி கையெழுத்திட்ட படிவம் வழங்கிய, அ.தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்.

நடவடிக்கை


சட்டத்தை திருத்தி, கடிதம் வாயிலாக ஒப்புதல் அளித்த, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில், அ.தி.மு.க., மீதும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், டாக்டர் சரவணன் தரப்பில், இன்று வழக்கு தொடரப்பட உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...