Friday, September 27, 2019

நாங்குநேரி காங். வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டி...

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுடன் அகில இந்தியச் செயலர் முகுல் வாஸ்னிக் இதற்கான அறிவிப்பிணை வெளியிட்டுள்ளார். நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‌போட்டியிட‌ விண்ணப்பித்த அக்கட்சியின் முன்னாள் தமி‌ழக‌த் தலை‌வர்‌ குமரி‌ ‌அனந்தன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம்‌ நேர்காணல் ‌நடைபெற்றது.
இந்நிலையில் ரூபி மனோகரன் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் ஆகியோரைச் சந்தித்து ரூபி மனோகரன் வாழ்த்துப் பெற்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...