Sunday, September 22, 2019

இயற்கை எண்ணைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் .

ரீபைண்ட் ஆயிலைப் பற்றித் தெரிந்துக்
கொள்வோமா? இதில் பெட்ரோலியக் கழிவு
களை கலக்குகிறார்கள். வித்துகளை காய
வைத்து அரைப்பதில்லை. வித்துகளை நசுக்கி,
நீராவி முறையில் 110 முதல் 180 டிகிரி வரை
வெப்ப நிலையை ஏற்படுத்தி, பிறகு எண்ணெய்
பிரித்தெடுக்கப் படுகிறது. வித்துகளில் மிச்ச
முள்ள எண்ணெயை பிரிப்பதற்கு ஹெக்சேன்
என்னும் ரசாயனப் பொருள் பயன் படுத்தப்
படுகிறது. இந்த ஹெக்சேனைப் பயன்படுத்தினால்
நம் உடலில் தசைகள், எலும்புகள் போன்றவற்றில்
பாதிப்புகளை ஏற்படுத்தும். அதோடல்லாமல் புற்று
நோய் உருவாக காரணமாகவும் இருக்கிறது.
மேலும் சுத்தமாக்க பாஸ்பேட் எனும் வேதிப்
பொருள் பயன்படுத்தப்படுகிறது. காஷ்டிக் சோடா
மூலம் மணம் நீக்கப்படுகிறது. எண்ணெயின்
நிறம், மணம், பிசுபிசுப்புத்தன்மை எல்லாம்
மாறிவிடும். ஆய்வில் இந்த உண்மைத் தெரிந்து
விடும். எனவே, நிறம், மணம், சக்தி இவற்றிற்கு
ஏற்றவாறு இராசயனங்களை சேர்க்கிறார்கள்.
சுட்ட எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம் என்று
சொல்வார்கள். ஆனால் இதுவும் சுட்ட எண்ணெய்
தான். இந்த எண்ணெய் உடலுக்குத் தீங்குதான்.
தயாரிக்கும் கம்பனிக்குத் தெரியாதா என்ன?
தெரியும். அவர்களுக்குத் தேவை பணம்.
நாம் என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...