Saturday, September 28, 2019

வாழ்க திராவிட பகுத்தறிவு...

நேரு காலத்தில் இருந்து இந்திரா காலம் வரைக்கும் டெல்லி சௌத் பிளாக்கை ஆண்டது தமிழன் தான். ஆம். ஐஏஎஸ் அதிகாரிகள் கிட்டத்தட்ட 90% தமிழன் தான். நாட்டின் நிதி மந்திரியாக பெரும்பாலும் தமிழனை தான் நியமிப்பார்கள். வட இந்தியர்கள் நம்மவர்களை ஒருவித பயம் கலந்த மரியாதையுடன் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் கௌரவமாகவும் நடத்தினார்கள். இவர் மதராஸி என்று நடுக்கத்துடனேயே அடுத்தவர்களிடம் பேசுவார்கள்.
ஆனால் இன்று...
எப்போது திராவிட கலாச்சாரம் தமிழகத்தில் பரவ ஆரம்பித்ததோ எல்லாம் பாழாகிப் போனது. இப்போது தமிழன் என்றாலே திருட்டுத்தனம் நிறைந்த அயோக்கியர்கள் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர். திமுக 1967-ல் ஆட்சியை பிடித்த போது, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் திரு.பக்தவத்சலம் அவர்கள் " தமிழ்கத்தில் விஷக்கிருமிகள் பரவி விட்டன" என்றார்.
நூற்றுக்கு நூறு சரியாகி விட்டது அந்த தீர்க்கதரிசியின் கூற்று.
திராவிட கலாச்சாரம் மருத்துவப் படிப்பிலும் காசு பார்த்ததோடு மட்டுமல்லாமல் மருத்துவப் படிப்பிலும் ஆள் மாறாட்டம் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்து போயுள்ளது. திராவிட்க் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்வதை வீடியோ எடுக்கும் அளவுக்கு மிக கேவலமாக போயுள்ளது மட்டுமில்லாமல் அந்த நபரை டிவி விவாதங்களுக்கு அழைத்து பேசவும் வைப்பது எந்தளவுக்கு இங்கு எல்லாமே சர்வ சாதாரணமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அதுசரி தலைவன் சரியாக இருந்தால் மற்றவர்களும் சரியாக தானே இருப்பார்கள். ஆனால் தலைவனே பல பிராடுகள் செய்பவராக இருந்தது தான் அவன் வழி வந்தவர்கள் தலைவனை பின்பற்றி நடக்கிறார்கள்.
பகுத்தறிவு சொல்லித் தந்த பாடம் இது தான் போலிருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...