Tuesday, September 24, 2019

கொட்சாரம் நல்லதை தரும் நேரமாக இருந்ந்தால் ஜாதகருக்கு சிறப்பான நல்ல பலன் கிடைக்கும் ,வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் .

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குருபெயர்ச்சி சனிப்பெயர்ச்சி பற்றிய விழிப்புணர்வு அவ்வளவு இல்லை.ஆனால் இந்த கணினி உலகில், தற்போது இதனைப்பற்றி ஒரு பயமும் மக்களிடையே, அதிகமாக உள்ளது.
உதாரணமாக உங்களுக்கு குரு தசை, சனி புத்தி, ராகு அந்தரம் நடக்கின்றது என்று எடுத்துக்கொள்வோம் அப்பொழுது இந்த மூன்று கிரகங்களின் கோச்சார நிலைபாடு, உங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குரு மற்றும் சனி பகவானுடைய பெயர்ச்சிகள், நம்முடைய வாழ்க்கையில் அதிகமாக கருத்தில் கொள்ளப்படுகிறது ஆனால் இதற்கு விதிவிலக்காக உங்களுடைய நடப்பு தசா புத்தி இந்த குரு மற்றும் சனி கிரகங்களுடன் சம்பந்தப்படவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
மேலும் உங்களுடைய நடப்பு தசா நாதன் புத்தி நாதனே மீறி இவர்கள் எதுவும் செய்துவிடமுடியாது.
ஆனால் உங்களுக்கு 6க்குரிய தசையோ அல்லது அஷ்டமாதிபதி தசை நடக்கும் பொழுது அவர்கள் பலமாக இருக்கும் போது இந்த சனி பகவானும் குரு பகவானும் இவர்களுடைய பெயர்ச்சிகள், மேலும் ராகு கேதுக்கள் அவர்களுடைய பெயர்ச்சி கோச்சாரப் பலன்களை எளிதில் செய்ய முடியும்
மேலும் நான் இன்னொரு முறை கூறுகிறேன் உங்களுடைய சுய ஜாதகமும் அதனுடைய அமைப்பு உங்களுக்கு சரியான பலன்களைத் தரும் கோச்சாரம் என்பது உங்களுடைய சுய ஜாதகத்தை பொருத்து ஏற்ற இறக்கத்தை தரும்.ஆகையால் குரு பெயர்ச்சி,சனி பெயர்ச்சி பலன்களை supporting or reference ஆக வைத்து கொள்ளுங்கள்!! நன்றி..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...