Monday, September 23, 2019

தக்காளி பன்னீர் சாண்ட்விச்.

தக்காளி பன்னீர் சாண்ட்விச்
தக்காளி பன்னீர் சாண்ட்விச்


















தேவையான பொருட்கள் :

கோதுமை பிரெட் - 6 துண்டுகள்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பன்னீர் - 1/2 கப்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தக்காளி பன்னீர் சாண்ட்விச்

செய்முறை :


தக்காளி, வெங்காயம், பன்னீர், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரெட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அடுத்து குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.

பின்பு அந்த தக்காளி, பன்னீர் கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.

இப்போது சூப்பரான தக்காளி பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...