Wednesday, September 25, 2019

சட்டப்படி எதிர்கொள்ளவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாத காரணத்தால் தமிழக காவல் துறை எந்த நடவடிக்கையும் புகாரின் மீது எடுக்கவில்லை. இந்த நிலையில் தன் பணபலத்தைக் கொண்டு அடுத்த கட்ட நகர்வைத் தொடங்கியுள்ளது திமுக. அந்த விதம் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பும் யுக்தியைப் பார்க்கிறேன். இதை சட்டப்படி எதிர்கொள்ளவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால்
1.நான் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் தனி நபர் தாக்குதல் செய்தவன் அல்ல, அதே போல் அவர் மகனும் திமுக பட்டத்து இளவர் உதய நிதி அவர்கள் மீதும் செய்தது இல்லை. இந்த சீமான் அவர் கட்சி ஆட்கள் பொதுவெளியில் எந்த அளவிற்கு அசிங்கமாகப் பேசுவார்கள் எப்படித் தனி நபர் தாக்குதல் நடத்துவார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.
ஆனால் ஏன் என் மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு வேகம்! ஏன் என்றால் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு திமுக திக மீது முக்கியமாக இந்துக்கள் மத்தியில் உருவாகிவருகிறது. அதனைத் தடுத்து நிறுத்த ஒரே வழி மிரட்டல் விடுவது இல்லை தங்கள் வழக்கமான ரவுடிகளை விட்டு மிரட்டுவது. இப்போது சட்டப்படி முடிந்த அளவு மிரட்டிப் பார்ப்போம் என்று கிளம்பியுள்ளார்கள். பல ஆயிரம் கோடிகளை வைத்துள்ள ஒரு கொள்ளை அடித்து பங்கு பிரிக்கும் கூடாரம் போல் கட்சி நடத்தும் திமுக இதைச் செய்வதை வியப்பாகப் பார்க்கவில்லை. அதே நேரம் இதற்கு அச்சம் கொண்டு திமுக திக எதிர்ப்பை நிறுத்தும் எண்ணமும் எனக்கில்லை.
2.நான் இஸ்லாமியர்கள் மீது வீடியோவில் தவறாக மத கலவரம் பரப்பு விதத்தில் பேசியதாகப் புகார் தெரிவித்துள்ள திமுக கொஞ்சம் அந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கவும். அந்த வீடியோ மட்டுமல்ல நான் வெளியிட்டுள்ள 100க்கும் மேற்பட்ட எந்த வீடியோ, 1000க்கும் மேலான பதிவுகள் எது வேண்டுமானாலும் தாராளமாக எடுத்துப் பார்க்கவும் - இஸ்லாமியர் மட்டும் அல்ல எந்த ஆன்மீக நம்பிக்கையையும் நான் அவதூறாகப் பேசும் நபர் அல்ல. ஒற்றுமையாக இந்தியர்கள் வாழ வேண்டும் என்று விரும்பும் என் நோக்கம் தெளிவாகப் புரியும். அதே நேரம் திக திமுக கூட்டம் சேர்ந்து இங்கே இந்த நாட்டில் தோன்றிய ஆன்மீக நம்பிக்கைகளை அழிக்கத் துடிக்கும் எவரையும் எந்த இயக்கத்தையும் அமைப்பையும் நான் எதிர்க்கிறேன் எதிர்ப்பேன். நான் போலி மதச்சார்பின்மை பேசி நடிப்பவன் அல்ல. என் ஆன்மீக நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும் நான் மற்றவர் ஆன்மீக நம்பிக்கையை மதிப்பது போல் அவ்வளவு தான் என் நோக்கம். ஆனால் திமுக திக போல் எப்படி ஒரு தரப்பு இந்துக்களை மொழி இனம் சொல்லிப் பிரித்துவிட்டு- இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அவதூறாக அசிங்கமாகப் பேசி , மற்ற மதத்தினருக்குச் சலாம் போடும் அந்த கீழ்த்தரமான வேலையை நான் செய்வது இல்லை.
அப்படி என்றால் இஸ்லாமியர் , கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு இந்துக்களை அவமானம் செய்யும் திமுக தான் இங்கே மிகப் பெரிய சமூக விரோத கும்பல்.
இன்றும் கூறுகிறேன் திமுக போல் ஒரு கட்சியை தடை செய்வது ஆக அவசியமான ஒன்று. நில அபகரிப்பு முதல் ஆள் கடத்தல் , கற்பழிப்பு தொட்டு ரவுடி ராஜியம் அனைத்தும் செய்வதோடு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாக நேரடியாகவும் மறைமுகமாகவும் நிற்கும் எந்த கட்சியும் நாட்டில் தடை செய்ய வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் எவருக்கும் இருக்க முடியாது. அரசியல் கட்சிகளை குறிப்பிட்டு விதி முறைகளுக்கு கீழ் கொண்டு வருவது அவசியம் இல்லை பிரிவினைவாதிகளை தாங்களே உருவாக்கி அவர்களுக்கு வேறு லேபில் ஒட்டி ஆனால் போதுமான ஆதரவுகளை கொடுத்து நாட்டை கெடுத்து நாசம் செய்வர். அதற்கு காஷ்மீர் நல்ல எடுத்துக்காட்டு என்றால் அடுத்த எடுத்து காட்டாக சமீபகாலமாக தமிழகம் மாறி வருகிறது.
"ஒருவேலை மாரிதாஸ் இன்று இருக்கலாம் ; திமுக புண்ணியவான்கள் தயவில் நாளை இந்த பூமியில் இல்லாமல் போகலாம் ஆனால் என் போல் ஆயிரம் ஆயிரம் மாரிதாஸ் நிச்சயம் வருவார்கள்". தேசத்தின் மீதும் , இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கைகள் மீதும் தாக்குதல் நடத்தும் அழிக்கத் துடிக்கும் திக , திமுக ஆதரவாளர்கள் கூட்டத்தையும் நிச்சயம் அவர்கள் முழுமையாக எதிர்த்து நிற்பார்கள். அதிமுக , திமுக இரண்டு பெரிய வேற்றுமை இல்லை என்று சொல்வது ஒருவகையில் உண்மை என்றாலும் இந்துகளுக்கும் , இந்தியாவிற்கும் எதிராக வேலை செய்வதில் திமுக அதன் ஆதரவாளர்கள் உச்சம் செல்வர். எனவே ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வருவதே ஒரு இந்துவாக , ஒரு இந்தியனாக அதையும் தாண்டி ஒரு சாதாரண மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன்.}
திமுக ஒரு தீய சக்தி. அதை அழித்தொழிக்க அனைவரும் கருத்து வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு நில்லுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...