இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெளிவாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட அர்ச்சகர்கள் 58 வயதை தாண்டியவர்கள் என்று கூறிவிட்டார். அப்படியென்றால் பல சந்தேகங்கள்.
1 அர்ச்சகர்களுக்கு சட்டப்படி ஓய்வு வயதை கருத்தில் கொண்டே அனுப்பப்பட்டார்கள் என்று இருக்கட்டும். அவர்களுக்கு லேபர் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்டதா?
2 ஞாயிற்றுக்கிழமையன்று வேலை பார்த்துள்ளார்கள். அதற்கு OT வழங்கப்பட்டதா?
3 குறைந்த பட்சம் 21 நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தாலும் PF ESI பிடித்தம் செய்திருக்கவேண்டும். அப்படி செய்யப்பட்டதா? அரசாங்கத்தை பொறுத்தவரை கோவில் ஒரு நிறுவனம். சொத்துகள், வரிகள், மின் கட்டணம், சம்பளம் எல்லாம் பிடிக்கப்படுகின்றன. மின்சாரம் கூட கமர்ஷியல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதனால் இது நிறுவனமே. நிறுவனத்துக்கு உள்ள சட்ட விதிகளின்படி அவர்களுக்கு மேற்ச்சொன்ன விஷயங்கள் செய்யப்பட்டனவா?
4 கோவில் அரசுக்கு சொந்தம் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் அரசாங்க ஊழியரான அர்ச்சகருக்கு பென்சன் வழங்கப்படுமா? வழங்கப்படுகிறதா?
5 கோவில் அரசுக்கு சொந்தமென்றால் வேலை செய்துகொண்டிருக்கும்போது அர்ச்சகர் இறந்துவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அரசாங்க வேலை தரப்பட்டிருக்கவேண்டும். குறைந்தது அதே கோவிலில் பணி புரியவாவது வாய்ப்பு தந்திருக்கவேண்டும். அது நடந்ததா? ஆதாரங்கள் எங்கே?
6 பணியில் இருக்கும் ஒரு அர்ச்சகர் இறந்தால் அவரது மனைவிக்கு பென்சன் தரப்படுகிறதா?
7 இது எல்லாவற்றையும் உடனடியாக அவர்களுக்கு 12% வட்டி போட்டு தந்துவிட்டு பின்னர் அரசாங்கம் இதர ஆணிகளை பிடுங்கலாம்.
No comments:
Post a Comment