Friday, February 22, 2019

இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்.

 பிரபல தெலுங்குப் பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
அருந்ததி, தேவி, பாரத் பந்த் போன்ற ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியவர் கோடி ராமகிருஷ்ணா. இந்த படங்கள் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வசூலில் சாதனை படைத்துள்ளன. ஏறக்குறைய 110 படங்களுக்கு மேல் இவர் இயக்கி உள்ளார். கடந்த சில நாட்களாக மூச்சுதிணறல் காரணமாக அவமதிப்பட்டு வந்த இவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிப் 22 அன்று இவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த கோடி ராமகிருஷ்ணாவின் உடலுக்கு தெலுங்கு திரைப்பட நட்சத்திரங்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டர் பக்கத்திலும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...