Monday, February 18, 2019

தேசதுரோகிகளை முதலில் ஒழிக்க வேண்டும்.

எல்லையை காக்கிற ராணுவம் உங்க கையில் இருக்கு. எல்லைப் பாதுகாப்பு படை உங்க கையில் இருக்கு.. பாரத பிரதமர் அவர்களே... பின்னே எப்படி வெடிமருந்து தீவிரவாதிகள் கையில் கிடைக்குது?
பொருளாதார அதிகாரம் அரசாங்கத்திடம் இருக்கு...ரிசர்வ் பேங்க் உங்ககிட்டே இருக்கு பின்னே எப்படி தீவிரவாதிகள் கைக்குப் பணம் போகுதுன்னு உங்களால பார்க்க முடியாதா?
சகல அதிகாரங்களும் உங்ககிட்டேதான் இருக்கு.. எந்த மாநிலமும் குறுக்க வர முடியாது. அப்புறமும் உங்களால் ஏன் தடுக்க முடியலே?
ராணுவம், பார்டர் செக்யூரிட்டி போர்ஸ், எல்லா அதிகாரங்களும் உங்ககிட்டேதான் இருக்கு. கம்யூனிகேஷன் சம்பந்தமான அனைத்து அதிகாரங்களும் உங்ககிட்டே தானே இருக்கு.
யார் போன் பேசினாலும், யார் ஈமெயில் அனுப்பினாலும் அதையெல்லாம் புகுந்து பாக்கற அதிகாரம் உங்ககிட்டேதான் இருக்கு. தீவிரவாதிகள் மத்தியில் என்னென்ன மாதிரியான கம்யூனிகேஷன் போயிட்டிருக்குன்னு உங்களால் பார்க்க முடியும்.. அதை பார்க்க வழி இருந்தும் இதை ஏன் தடுக்கலே பிரதமர் அவர்களே...
இது தற்போதைய கேள்விகள் அல்ல.. இதெல்லாம் முன்னாள் பாரத பிரதமரிடம் 2013 ஆம் கேட்டகப்பட்டவை, கேட்டவர் சாட்சாத் நம்ம தற்போதய பாரத பிரதமர் அவர்கள்.
இப்பொழுது நாம் இப்படி எந்த கேள்வியும் கேட்காமல் சிறந்த தேசபக்தனாக செயல் பாடுவோம்.
ஜெய்ஹிந்த்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...