Sunday, December 22, 2019

ஆலய அர்ச்சகரை பற்றிய சிறு பதிவு :

1, சராசரியாக 80/ சதவிகித சிவாச்சாரியார்கள் காலை உணவை உண்ணுவதில்லை.
2, வருடத்தில் தொடர்ச்சியாக ஒருமாதம் (மார்கழி) முழுவதுமாக அதிகாலை 3 மணிக்கு கண் விழிக்கின்றனர்.
3, விடுமுறை கிடையாது மாற்று சிவாச்சாரியார் இருந்தால் மட்டுமே விடுமுறை சாத்தியம்.
4, பெரும்பாலான ஆலயங்களில் குறைந்த பட்சம் 3நபர் செய்ய வேண்டிய வேலைப் பழுவை ஒரே சிவாச்சாரியார் செய்கிறார் காரணம் ஒரு நபருக்கும் குறைந்த வருமானம்தான் வரும் மற்ற இருவருக்கு அவரால் தர இயலாது நிர்வாகமும் எங்களுக்கு வேலை நடந்தா போதும் என்று இருந்து விடும் ஆனால் விழா நாட்களில் ஆலய நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அந்த வருமானம் ஆலய அர்ச்சகருக்கு என்று ஒரு சதவிகிதம் கூட செலவு செய்வதில்லை உண்டியல் வருமானமும் நிர்வாகத்திற்கு கூடுதல் வரவாக கிடைக்கும் ஆனால் அர்ச்சகர் தட்டுவருமானம் மட்டுமே இங்கு பக்தர்கள் மனதில் மிகைப்
படுத்தப்பட்டுள்ளது.
5, அதிகமாக தண்ணீரில் நிற்பதால் கால்வலி போன்ற உபாதைகள்.
6, காலை உணவு உண்ணாததால் சர்க்கரை
நோய் பாதிப்பு.
7, கற்பூர புகை ஊதுபத்தி புகை இவைகளால் மூச்சுத்திணறல்.
8, தரமற்ற பூஜைப் பொருட்கள் கலப்படத்தால் சருமம் பாதிப்பு.
9,தீபாவளி,பொங்கல் இதுபோன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பக்தர்களுக்காக அதை கொண்டாட முடியாத சமூகம்.
இதுபோன்ற பல சிரமங்களை கடந்து எந்தவித அரசு ஆதரவோ,மத்தியில் ஆதரவோ,சாதி ஆதரவோ இல்லாமலும் ஆலய சொத்துக்கள் எவ்வளவோ இருந்தும் அதில் இருந்து ஒருபிடி மண்ணிற்கு கூட ஆசைப்படாமலும் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை என் கடன் உன் பணி செய்து கிடப்பதே என்ற வாசகத்திற்கு இணங்கி
இன்று வரை அரசியலிலோ,
சினிமாவிலோ,தொழில் துறைகளிலோ,மற்ற மத்திய மாநில அரசு துறைகளிலோ கால் பதிக்காமல் வாழ்ந்து வரும் பழங்குடி இனமே சிவாச்சாரியார் சமூகம்.
விளிம்பு நிலை சமூகமாய் ஒரு சமூகம்.
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்துணையாவது நமச்சிவாயவே.
உலகில் எந்த ஒரு இனத்திற்கும் குருவோ,தலைவரோ அல்லது தோற்று வித்தவரோ இருப்பார் ஆனால் சிவாச்சாரியார்களுக்கு ஈசனே குரு ஈசனே அனைத்தும் இதை மமதையில் சொல்லவில்லை பெருமையில்
கூறவில்லை.
அவர்களுக்கு எந்தவித சலுகையோ இட ஒதுக்கீடோ கேட்கவில்லை.
அவர்களை அப்படியே விட்டு விடுங்கள் வாழ்ந்து விட்டுப் போகிறார்கள்.
இந்த பதிவை பார்த்த
ஒரு பக்தர் மனதில் உள்ள சிவாச்சாரியார் பற்றிய தவறான எண்ணம் மாறினாலும் அது இந்த பதிவின் வெற்றியே.!!!
தமது தள்ளாத வயதிலும்
சிவத் தொண்டாற்றும் இவர்களின் திருவடி வணங்குவோம் !!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...