Thursday, December 26, 2019

சிவ கார்த்திகேயன் என்கிற சி கா!!!

விஜய் டிவியில் கூரூப்பில் மிமிக்ரி காமெடி போட்டு அசத்தியவர், மெரினா படம் மூலம் பெரிய திரையில் கால்பதித்து கேடிபில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்தபோது ஹிட்களை கொடுத்தவர் பின் பஞ்ச் டயலாக், பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள், சூப்பர் ஸ்டார் கனவு என வழக்கமாக மற்ற நடிகர்கள் செய்யும் அதே தவறை செய்ததால் இன்று கலக்கத்தில் இருக்கிறார்.
முதல் ஆறேழு படங்களிலேயே 15 கோடி சம்பளத்தை தொட்டு, ஹிட்கள் கொடுத்தபோது உண்மையில் விஜய், தனுஷ், அஜித், சிம்பு எனப்பலரும் ஆடித்தான் போனார்கள்.
தனது ஏழாவது படம் நடித்துக்கொண்டிருந்தபோது நடிகர் சங்கம் நடத்திய போராட்டத்தில் கமல், ரஜினி, விஜய்க்கு இணையாக முதல் ரோவில் இடம் கொடுத்தபோது இவருக்கு கொஞ்சம் அகந்தையும் வந்துவிட்டதாய் உணர்கிறேன்.
ஒரே அடியாய் சம்பளம் 20 கோடிகளை தொட்டவுடன் தன் நிலை மறந்து ரசிக குஞ்சுகளுக்காக மட்டும் நடிக்க ஆரம்பித்ததால் வந்த வினை இது.
ஹீரோ, மிஸ்ட்டர் லோக்கல், சீமை ராஜா, வேலைக்காரன் என கடந்த ஐந்து படங்களில் நான்கு படு தோல்வி.
எப்போதும் வரிசையாக வரும் விடுமுறை நாட்களில் தன் படத்தை வெளியிட்டு குழந்தைகள், தாய்மார்களை கவர்ந்து ஹிட் அடித்த சி கா இன்று பலத்த பண நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார்.
நல்ல நடிகர், துள்ளலான நடிகர், பலகலை வித்தகர், இளவயதில் உச்சத்தை தொட்டவர் சினிமாவின் மாய பிம்பத்தில் தன்னை தொலைத்துவிட்டு நிற்கிறார்.
கொஞ்சம் ரஜினி, கொஞ்சம் விஜய், கொஞ்சம் எம்ஜிஆர் என நடிப்பில் கலந்து கட்டி அடித்த அன்றைய சிகாவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இப்போதே விழித்துக்கொள்ளுங்கள் சிகா, சினிமா ஒரு மாயை உலகம், கொஞ்சம் சாய்ந்தாலும் உங்களை அடக்கம் செய்துவிடுவார்கள். பழைய ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர்... போன்ற படங்களைப்போன்ற யதார்த்த ஹீரோக்களைத்தான் மக்கள் விரும்புவார்கள்.
பஞ்ச் பேசி, ஒரே அடியில் நாலுப்பேரை வீழ்த்தும் சூப்பர் ஹீரோவாய் இருப்பதைவிட பக்கத்து வீட்டு பையன் என்கிற அந்த இமேஜ்தான் உங்களை எங்களிடம் அதிகம் சேர்க்கும்.
காசுக்காக உங்களை சுற்றி இருக்கும் கூட்டத்தை நம்பாதீர்கள், காசு கொடுத்து உங்களை சுத்திப்போடும் உண்மை ரசிகனுக்காக நடியுங்கள்!!!
மீண்டு வர வாழ்த்துகிறேன், சொந்த உழைப்பில் வளர்ந்து நிற்கும் நீங்கள், இன்னும் பல வெற்றிகளை தொட..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...