Monday, December 23, 2019

ஆட்சியை புடித்து காங் தலைப்பு செய்தி ,,

ஜார்கண்டில் ஆட்சியை பிடித்தது காங்.,ஒரு பார்வை
ஆட்சியை புடித்து காங் தலைப்பு செய்தி ,,
நம்ம நாட்டில் பணத்திற்காக அல்லது தொழிலுக்காக அல்லது அரசியலுக்காக தொழில் செய்யும் ஊடகங்களே அதிகம்.. பொய்யின் பிறப்பிடமும் ஊடகம் தான்
நல்ல ஊடகம் ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது ஜேஎம்எம் கூட்டணி என்றல்லவா தலைப்பு இருக்க வேண்டும்,, உண்மையும் அதுதானே.
ஒரு காலத்தில் காங்கிரஸ், காங்கிரஸ் என்று ஒரு கட்சி இருந்தது. அதை தொங்கி கொண்டு மாநில சின்ன சின்ன கட்சிகள் இருந்தது,, இப்போது அந்த அந்த மாநிலத்தில் இருக்கும் சின்ன சின்ன கட்சியை பிடித்து தொங்கி கொண்டிருக்கின்றது காங்கிரஸ்,, தனியா நின்னு மெஜாரிட்டி வர துப்பில்லை ஏன் தனியா நீக்கவே துப்பில்லை ,,, காங்கிரஸ் ஆட்சியை புடித்ததாம் ஊடக செய்தி
விஸ்வரூப வெற்றிக்கு காரணம்
* போன முறை இரண்டு கட்சிகளுடன் கூட்டணி ஆனால் இந்த முறை தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்த பாஜகவின் வியூகம்..
* ஜே..எம்.எம். காங்கிரஸ், ஆர்ஜேடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனின் பிரிவு, JMK, JVM ஆகிய அனைத்து கட்சிகளும் சேர்ந்து இணைத்து உருவான மெகா கூட்டணி
* பிஜேபி மூத்த தலைவர் சர்யூ ராய்,மற்றும் மூணு பேர் தனக்கு சீட் ஒதுக்கப்படவில்லை என்ற கோபத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார்கள்
* பாஜகவின் முதல்வர் வேட்பாளரான ரகுபர் தாஸ் பழங்குடியினருக்கு எதிராக கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம். பழங்குடியினர் நிலங்களை விற்பனை செய்யவோ, கையகப்படுத்தவோ முடியாது என்று இருந்த சட்டத்தை மாற்றினார்.. அதனால் அவர் மீது பழங்குடியினர் கடும் அதிருப்தியில் இருந்தனர். பழங்குடியினர் மத்தியில் பிரபலமானவர் தலைவரான சிபுசோரன் மகன், ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதுவும் ஒரு காரணம்
சிங்கம் தனித்து களம் கண்டது...
வீழ்ந்தது பாஜக அல்ல எதிர்கட்சிகள்.. இப்பொழுதும் பாஜக ஜார்ஜ்கன்டில் பலமா உள்ளது...தோற்றாலும் மக்களின் அதிக வாக்குகளை கொடுத்திருக்கிறார்...
இத்தனை கட்சி கூட்டணி அமைத்து தான் காங்கிரஸ் 14 சீட் ,, ஆனால் தனியாளாக பிஜேபி 29 சீட்.. மேலும் போன முறை மொத்தத்தில் 41 லட்சம் ஒட்டு வாங்கிய பிஜேபி இந்த முறை 43 லட்சம் ஒட்டு வாங்கி இருக்கிறது
தனியா நிக்க துப்பில்லாத " நொண்டி கால் " காங்கிரஸ் பிஜேபியை விமர்ச்சிக்கிறது ,, அதிலும் முகநூலில் சில பேர் காவிகள் இல்லாத இந்தியாவாம்,, வெக்கமா இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...