Wednesday, January 22, 2020

சூப்பர்ஸ்டார்_கவனத்துக்கு...

ஈ.வெ.ரா. நடத்திய ஊர்வலம் உண்மை தான். அதனை பற்றி நீங்கள் படித்துச் சொன்னதும் உண்மை தான்.
உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு நன்றி!
உங்களது நேர்மையான நிலைப்பாட்டில்
உறுதியாக நிற்பதற்கு மனமார்ந்தப் பாராட்டுக்கள்.
லும்பன்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், மன்னிப்புக் கேட்க முடியாது என்று சொன்ன உங்கள் துணிச்சலுக்குக் கோடானுகோடி இந்துக்கள் துணை நிற்போம்...
கொஞ்சம் கூட தளராதீர்கள்!
ஈ.வெ.ரா. நடத்திய ஊர்வலம் பற்றியும்,
பைத்தியக்கார தி.க. கூட்டம் செய்த அட்டூழியம் பற்றியும்
முன்னாள் தி.மு.க.காரரும்
கவிஞருமான கண்ணதாசன் அவர்கள் பதிவு செய்திருக்கும் ஆதாரத்தையும் இனி மேற்கோள் காட்டுங்கள்.
இதோ
#கண்ணதாசன் எழுதுகிறார்...
"என்னை இந்து மதத்தில் வெறி பிடித்தவனாக்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
சேலத்தில் பெரியார் நடத்திய 'ஆபாசக் கடவுள்' ஊர்வலமே அது.
எல்லா மக்களுக்கும் பொறுப்பேற்றுக்கொண்ட ஓர் அரசாங்கம் இந்த ஊர்வலத்தை அநுமதித்தபோது, புத்தி சுவாதீனத்தோடு தான் இருந்ததா என்பது கேள்விக்குரிய விஷயம்.
ராமர் படத்தையும் கிருஷ்ணர் படத்தையும் செருப்பால் அடிப்பதுதான் பகுத்தறிவா?
கடவுள் நம்பிக்கை சிலருக்கு இலை என்று யாரும் கவலைப்படவில்லை.
ஆனால், நம்பிக்கை உள்ளவர்களின் உணர்வுகளை அவமதிப்பதை
எந்தக் காட்டுமிராண்டியும் அநுமதிக்க மாட்டான்!"
ஈ.வெ.ரா. 'ஆபாசக் கடவுள்' ஊர்வலம் நடத்தியபோது ஆட்சியில் இருந்தது கருணாநிதியின் திமுக அரசு. கருணாநிதியையும் திமுக அரசையும் தான் பைத்தியம் என்கிறார் கண்ணதாசன்.
ஈ.வெ.ரா.வின் கொடுஞ்செயலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக
'#நான்_ஒரு_இந்து' எனும் தலைப்பில் கவிஞர் ஒரு காத்திரமான கட்டுரை எழுதினார். எந்தப் பத்திரிகையில்? #துக்ளக்கில்.
ஈ.வெ.ரா. கும்பலின் இந்து மத துவேஷத்தை அடித்து நொறுக்கும் விதமாகத் தான்
கவிஞர் கண்ணதாசன்
'அர்த்தமுள்ள இந்து மதம்' நூல் எழுதினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...