Monday, January 20, 2020

எந்ததுன்பத்திற்கும்தீர்வுஉண்டுநண்பா எதுவும்நிரந்தரம்இல்லை.

★ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி
விவேகானந்தருக்கும் நடைபெற்ற
உரையாடல்...உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு
ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும்
மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை
கொண்டவை.★
சுவாமி விவேகானந்தர் : நாம் ஏன் எப்போதும்
மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே
நினைத்து கற்பனை செய்து கொண்டிருப்பது
உன் வழக்கமாகி விட்டது.
அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க
முடியவில்லை.
சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு
மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல்
வைரத்தை பட்டை தீட்டமுடியாது.
நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப் படுத்த முடியாது.
நல்லவர்கள் சோதனைக்கு
உள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்கு உள்ளாக மாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே
தவிர கீழே செல்ல மாட்டார்கள்.
சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள்
நன்மைக்கு என்று சொல்கிறீர்களா?.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம்.
அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு
யாருமில்லை.
அது முதலில் சோதனையை
கொடுத்து விட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்.
சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற
பிரச்னைகளில் மூழ்கி தவிப்பதால் நாங்கள்
எங்கே போகிறோம் தெரியவில்லை….
இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியே
பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது.
உனக்குள்ளே பார்.
புரியும்.கண்களால் பார்க்கத்தான் முடியும்.
ஆனால் உள்ளத்தால் தான் வழியை காட்டமுடியும்.
சுவாமி விவேகானந்தர் : சரியான பாதையில்
போகும் போதும் தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றி என்பது பிறரால்
அளக்கப் படுவது. ஆனால் அதில் கிடைக்கும்
திருப்தி என்பது உன்னால் மட்டுமே உணரப்படுவது.
சுவாமி விவேகானந்தர் : கடினமான
சூழ்நிலைகளில் எப்படி நீங்கள் உற்சாகம்
குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் :
எப்பொழுதும், இனி எப்படி போகப் போகிறோம்
என்று அச்சப் படுவதை விட இது வரை நீ எப்படி
வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து
வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த
வரங்களை எண்ணிக் கொள்.இழந்தவைகளை
அல்ல.
சுவாமி விவேகானந்தர் : இந்த மக்களை
நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப் படும் போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை
கேட்பதில்லை.
அதை நினைத்து தான் வியக்கிறேன்.
சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச்
சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?
இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்தகாலத்தை வருத்தமின்றி..ஏற்றுக்
கொள். நிகழ் காலத்தை நம்பிக்கையோடு
கைக் கொள். எதிர் காலத்தை அச்சமின்றி
எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை
பெற கடைபிடிக்க வேண்டிய நியதி.
சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரே ஒரு
கேள்வி. சில நேரங்களில்
என்னுடைய
பிரார்த்தனைகளை இறைவன் கேட்கவில்லையோ என்று
தோன்றுகிறது.
இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப் படாத
பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. அச்சத்தைவிடு.
நம்பிக்கை கொள்.
வாழ்க்கைஎன்பது
தீர்வு காணப் பட வேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்சனை அல்ல.எப்படி வாழ வேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிகமிக இனிமையாக மாறி விடும் என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...