Tuesday, January 21, 2020

ஒரு #தூய #காங்கிரஸ்காரராக #காந்தியை #சிந்திப்போம்!!

பெரியாரை ஆதரிப்பதால் இப்போது காங்கிரஸுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை
பெரியாரே தன் மீது செருப்புவீசியவன் காங்கிரஸ் காரன் என்று அந்த மேடையிலேயே சொல்லும் வீடியோவே இப்போது வைரலாக இருக்கிறது..
அது மட்டுமல்ல கீ வீரமணி பேசும் வீடியோவில் நாங்கள்தான் செருப்பால் அடித்தோம்
அதன்பிறகுதான் 183 இடங்களில் திமுக வெற்றி பெற்றது என்று சொல்கிறார்...
ஒரு காங்கிரஸ் காரராக இந்தவிசயத்தில் பிடித்திருந்தால் ரஜினியை ஆதரியுங்கள் இல்லையென்றால் அமைதியாக இருங்கள்
அதைவிட்டுவிட்டு
திகவை ஆதரித்து பேசுவதால் நமக்கு ஒரு ஹைகோர்ட்டும் பிரயோஜனம் இல்லை...
காந்தியையும், நேருவையும் தனது விடுதலை பத்திரிகை மூலம் கேவலமாக பேசிய பெரியாருக்காக காங்கிரஸ்காரர்கள் எதற்காக வால் பிடிக்கவேண்டும்?
காங்கிரஸ் கொள்கை ஹிந்து விரோதமல்ல.
ராமபிரானின் சிலை செய்து திக க்காரன் செருப்பால் அடித்தது உண்மை.போட்டோவைப் பாருங்கள்
இன்றும் அதை செய்கிறான்.
இதை சில இஸ்லாமிய
சகோதரர்கள் ஆதரித்து பதிவதில் அவர்கள் FAKE ஐ டி க் காரர்களாக இருப்பார்கள் அல்லது திகவினர் அந்த ஐ டிக்களில் இயங்குகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
ஒரிஜினல் முஸ்லீம் பிற மத சர்ச்சைகளுக்குள்
மூக்கு நுழைக்கமாட்டான்.
அதை சொன்ன ரஜினிக்கு எதிராகவும், அத்தகைய தீய செயலை செய்த திக வுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் காரர்கள் பதிவிடுவதனால் காங்கிரஸுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது.
1984 ல் இரண்டு MP க்களோடு இருந்த பாஜக ராமர் என்ற ஒரு சொல்லை வைத்து ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.
நம்ம என்ன செய்கிறோம் ராமர் சிலையை,ராமர் படத்தை செருப்பால் அடிப்பவனை ஆதரித்து முகநூலில் பதிவுகள் செய்து ஹிந்துக்களை மீண்டும் மீண்டும் காங்கிரஸிடம் இருந்து அகற்றுகிறோம்.
இதை தெரிந்து செய்கிறார்களா,தெரியாமல் செய்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை.
இவர்கள் ஹிந்துக்களை முழுவதுமாக பாஜக வசம் திருப்பிவிட
பாஜக வால் ஏவி விடப்பட்டவர்களா?,
என்ற என் சந்தேகத்தில்
நியாயம் இல்லை என்று எவரும் சொல்ல முடியுமா?
எது செய்தாலும் காங்கிரஸ் வளரவேண்டும்,
காங்கிரஸிலிருந்து அகன்று நிற்பவர்களை காங்கிரஸ் வசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுங்கள்.
இந்த பதிவின் மூலம் என்னை சங்கி என்று அழைப்பவர்களும்,மனதில் நினைப்பவர்களும் இருக்கலாம்.
அப்படி அழைத்தாலோ நினைத்தாலோ
எனக்கு கவலை இல்லை.இதில் நான் சகோதரர் ஹனுகுமார் கட்சி!
காங்கிரஸ் மீண்டும் வலுப்பெற வேண்டும்.
வந்தேமாதரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...