Thursday, January 30, 2020

நினைத்ததை முடிப்பேன்: ஸ்டாலினுக்கு அழகிரி சவால்.

''மற்றவர்கள் தான், கருணாநிதியின் பிள்ளை அல்ல; நானும் கருணாநிதியின் பிள்ளை தான். நினைத்ததை சாதிப்பேன்; நினைத்ததை முடிப்பேன்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சவால் விடுத்தார்.





வழக்கறிஞர் சங்க செயலர் மோகன்குமார் இல்ல திருமணத்தை நேற்று நடத்திய அழகிரி, தன், 69வது பிறந்த நாளை முன்னிட்டு, கேக் வெட்டி, பேசியதாவது:தி.மு.க., துணை பொதுச் செயலர் சுப்புலட்சுமி ஜெகதீசன், இலங்கை தமிழர் பிரச்னையில், மதுரை சிறையில் இருந்த போது, வழக்கறிஞர் மோகன்குமார் தான் அவருக்கு உதவினார். அதை அவர் மறந்திருக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும்.மறப்பது என்பது, இப்போது சாதாரண விஷயம். அதற்கு, நானே எடுத்துக்காட்டு. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் எனக்கு வணக்கம் செலுத்தி பேசுகின்றனர். ஆனால், என் கூட பழகியவர்கள், என்னை சந்தித்து பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.

எப்போது, இது மாறப் போகிறது என்பது தெரியவில்லை. மாறவில்லை என்றால் அவ்வளவு தான். என்னைப் பற்றி, எல்லோருக்கும் நன்கு தெரியும். மற்றவர்கள் மட்டும் தான், கருணாநிதியின் பிள்ளை அல்ல; நானும் கருணாநிதியின் பிள்ளை தான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.நினைத்ததை சாதிப்பேன்; நினைத்ததை முடிப்பேன். நல்லவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...