Monday, January 20, 2020

பன்னீரில் செய்யலாம் சூப்பரான பாயாசம்.

குழந்தைகளுக்கு பாயாசம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்பபடி என்று பார்க்கலாம்.
பன்னீரில் செய்யலாம் சூப்பரான பாயாசம்
பன்னீர் பாயாசம்


















தேவையான பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
பாதாம் - 5
முந்திரி பருப்பு - 5
உலர் திராட்சை - 10
பன்னீர் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
குங்குமப்பூ - சிறிதளவு
கண்டென்ஸ்டு மில்க் - கால் கப்
நெய் - சிறிதளவு

பன்னீர் பாயாசம்

செய்முறை:

பன்னீரை துருவிக்கொள்ளவும்.

முந்திரி பருப்பு, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் பாதாம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை போன்றவற்றை வறுத்துக்கொள்ளவும்.

சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைத்துக்கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.

கொதிக்க தொடங்கியதும் ஓரளவு கெட்டி பதத்துக்கு வரும் வரை மீண்டும் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

பால் கெட்டியானதும் கண்டென்ஸ்டு மில்க், பன்னீரை சேர்த்து கிளறி கொதிக்கவிடவும்.

கொதிக்க தொடங்கியதும் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.

இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, பாதாம் சேர்த்து இறக்கவும்.
ருசியான பன்னீர் பாயாசம் தயார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...