Sunday, November 29, 2020

*தேன்கூடு தினம் ஒரு கதை..*🐝

 தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.._

_அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.._
_தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.._
_அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால்.. பல துண்டுகளாக வெட்டினார்.._
_பின்னர் கத்திரிக்கோலை.. தன் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்.._
_துணியை தைத்து முடிந்ததும், ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.._
_இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம்,_ *“அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள்.. ஊசி சிறியது.. மலிவானது.. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே.. அது ஏன்..?”* என்று கேட்டான்..
*“ நீ சொல்வது உண்மைதான்”*
*கத்திரிகோல் அழகாகவும்.. மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது.. அதாவது பிரிப்பது!*
*ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது..*
என்றார் தையற்காரர்..
🐝
👇
_*ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே, நிர்ணயிக்கப்படவேண்டும்..*_
_*அவர் உருவத்தை வைத்து அல்ல..*_
Image may contain: one or more people and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...