Tuesday, June 27, 2017

*திருமுதுகுன்றம்*

🙏🏽 *தினம் ஒரு திருக்கோவில்:*🙏🏽
🍁🌤🍁🌤 *BRS*🍁🌤🍁🌤🍁
*சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்ற ஸ்தலம் ; காசியை காட்டிலும் மேம்பட்ட தலம் ; பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் சிவயாலயம்..*
🔵🔵 *BRS*🔵🔵🔵
*அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் , கடலூர்*
தொலைப்பேசி : *+91- 4143-230 203.*
🦋🎸🦋🎸 *BRS*🦋🎸🦋🎸🦋
மூலவர்: *விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்)*
அம்மன்/தாயார்: *விருத்தாம்பிகை (பாலாம்பிகை - இளைய நாயகி)*
தல விருட்சம்: *வன்னிமரம்*
தீர்த்தம்: *மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்*
ஆகமம்/பூஜை: *காமிகம்*
பழமை: *1000-2000 வருடங்களுக்கு முன்*
புராண பெயர்: *திருமுதுகுன்றம்*
ஊர்: *விருத்தாச்சலம்*
பாடியவர்கள்: *திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்*
🅱 தேவாரப்பதிகம்:🅱
*ஆடிஅசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ் முதுகுன்றரே.* - சுந்தரர்.
🌱 *தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9 வது தலம்.* 🌱
🅱 திருவிழாக்கள் :🅱
🌻 *பிரம்மோற்சவம் - மாசி மாதம் - 10நாட்கள் 9 வது நாள் தேர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும்,*
🌻 *ஆடிப்பூரம் - 10 நாட்கள் திருவிழா - அம்பாள் விசேஷம் - திருக்கல்யாணம் - கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா - ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்,*
🌻 *வசந்த உற்சவம் - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது,*
🌻 *ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும் (உற்சவர்) சிறப்பு அபிசேஹம் நடைபெறுகிறது.*
🌻 *பௌர்ணமி அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.*
🅱 தல சிறப்பு:🅱
🎭 *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*
🎭 *ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது.*
🎭 *தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது.*
🎭 *இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம்.*
🎭 *இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும். காளஹஸ்தியில் உள்ளது போல, இவர் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.*
🎭 *இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.*
🎭 *குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாடியுள்ளனர்.*
🎭 *சம்பந்தரால், இத் தலத்தை அடையும் போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப் பெற்ற பெருமையுடையது.*
🎭 *ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது.*
🎭 *சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று.*
🎭 *இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.*
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
(கந்தபுராணம் - வழிநடைப்படலம்)
🎭 ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது.
🎭 *சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.*
🎭 *இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன.*
🎭 *எல்லா மலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும்.*
🎭 *சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத்தலம் ஆகும்.*
🅱 நடை திறப்பு:🅱
🗝 *காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.*🗝
🅱 பொது தகவல்:🅱
🍁 *ஆகம கோவில்கள் ( 28 லிங்கங்கள்)  🍁
🦋 *சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார்.*
🦋 *இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன.*
🦋 *இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.*
🦋 *28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன.*
🦋 *இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.*
🅱 விருத்தாச்சலம் பெயர்காரணம் : 🅱
🦋 *"விருத்த'* என்றால் *"முதுமை'* என்றும் *"அசலம்'* என்றால் *"மலை'* என்றும் பொருள்படும். எனவே *"விருத்தாசலம்'* என்றால் *"பழமலை'* என்பது கருத்தாகிறது. தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் *திருமுதுகுன்றம்* என்று போற்றப்படுகின்றது.
🅱 *பிரார்த்தனை:*🅱
🌹 இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.
🌹 இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது.மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
🌹 ஞாயிறு அன்று ராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.
🌹 இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மைபயன்களும், மறுமையபயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
🌹 முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன.
🅱 *நேர்த்திக்கடன்:*🅱
💥 சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.
💥 இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.
🅱 *தலபெருமை:*🅱
🍁 *சக்கரங்கள் அமைந்த முருகப்பெருமான் 🍁
🔥 *ஈசன் சன்னதிக்கும் விருத்தாம்பிகை சன்னதிக்கும் இடையில் அமைந்து உள்ளது 28 சிவலிங்கங்களுடன் உடனுறையும் முருகன் வள்ளி தெய்வானை காட்சியாகும்.*
🔥 *முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலக்காட்சியும் 28 சிவலிங்கங்கள் ஆகம விதிப்படி அமையப்பெற்று அனைவராலும் வணங்கப்பட்டு வருவது மிகவும் சிறப்பிற்குரியதாகும்.*
🔥 *நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் உடனுறைக்கு மேலே சக்கரங்கள் அமைந்தது எல்லா வளமும் கிட்டும் என்பதை நினைவுறுத்துகின்றன. இது போல சக்கரங்கள் அமைந்திருப்பது சில திருத்தலங்களில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.*
🅱 எல்லாமே ஐந்து: 🅱
🔥 *இக்கோயிலில் எல்லாமே ஐந்து தான்.*
💧ஐந்து மூர்த்தங்கள்: 💧
*விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.*
🔥 இறைவனின் ஐந்து திருநாமம்: 🔥
*விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.*
🔥 ஐந்து விநாயகர்: 🔥
*ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.*
🔥இறைவனை தரிசனம் கண்ட ஐவர்: 🔥
*உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.*
🔥 ஐந்து கோபுரம்:🔥
*கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.*
🔥 ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): 🔥
*தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.*
🔥ஐந்து கொடிமரம்:🔥
*இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.*
🔥ஐந்து உள் மண்டபம்:🔥
*அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.*
🔥ஐந்து வெளி மண்டபம்: 🔥
*இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.*
🔥ஐந்து வழிபாடு:🔥
*திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.*
🔥ஐந்து தேர்:🔥
*விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.*
🔥தலத்தின் ஐந்து பெயர்: 🔥
*திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.*
🅱 முத்தா நதியில் பொன் : 🅱
🔥 *ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படையாகக் கொண்டே, "ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்' என்ற பழமொழி தோன்றியது.*
🔥 *இறைவன் தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவே தான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.*
🔥 *முருகன் சிவனை பூஜித்த தலம் இது.*
🔥 *விபசித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் முதுகுன்றத் திருக்கோயில் ஆகும்.*
🔥 *மணி முத்தா நதிக்கரையில் அமைந்த முதுகுன்றம் என்பது தான் பழமலை ஆகும்.*
🔥 *மற்ற சிவ தலங்களில் துர்க்கை அம்மன் சிவன் கோயிலில் ஆட்சி செய்வதாக அமைந்தி ருக்கும். ஆனால் இந்த முதுகுன்றத்தில் துர்க்கை உமையவளான விருத்தாம் பிகையின் வடக்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் இருந்து அருளாட்சி செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.*
🔥 *தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.*
🔥 *இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன.*
🔥 *இக்கோயிலில் திருப்பணி செய்த விபசித்த முனிவர், தன் வேலையாட்களுக்கு சம்பளமாக இம்மரத்தின் இலைகளை பறித்து தருவார். அது அவரவர் உழைப்புக்கு ஏற்ப பொற்காசுகளாக மாறிவிடுமாம்.*
🔥 *இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.*
🔥 *பெரியநாயகியம்மை பதிகம், க்ஷேத்திரக் கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது.*
🔥 *கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.*
🅱 முக்திதலம் : 🅱
🥀 *காசியைப் போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் "விருத்தகாசி' என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் "காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி' என்ற பழமொழி கூட உண்டு.*
🥀 *இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத் தலைப்பால் விசிறி அவைகளின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சம டைவதற்காக "நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலபுராணம் கூறுகிறது.*
🅱 பாலாம்பிகை : 🅱
🌤 *யுகம் கண்ட தலமான இங்குள்ள அம்மனின் திருநாமம் விருத்தாம்பிகை. ஒருமுறை திருவண்ணா மலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார். அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது.*
🌤 பசியை போக்க, இத்தல பெரியநாயகியிடம் சோறு வேண்டி, *"கிழத்தி'* என்ற சொல் வரும்படி ஒரு பாடல் பாடினார். இதை கேட்ட பெரியநாயகி கிழவி வேடத்தில் அங்கு வந்து, *""கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும் ? இளமையுடன் இருந்தால் தான் நீ கேட்டது கிடைக்கும்,''* என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர், *"அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா''* என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்து சோறு போட்டாள். அன்று முதல் *"பாலாம்பிகா'* என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.
🅱 *கல்வெட்டுக்களில் இருக்கும் அரசர்களின் பெயர்கள்  🅱
🌤 பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன், இராஜாஜி ராஜ சோழன், விக்கிரம சோழன், 2-ம் இராஜராஜ சோழன், 3-ம் குலோத்துங்க சோழன், ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், வீரசேகர காடவராயன், அரச நாராயணன் கச்சிராயன், கோப்பெருஞ்சிங்கன், கச்சிராயன் எனும் அரச நாராயணன் ஏழிசை மோகன், விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், மாவர்ம பாண்டியன், கோனேரின்மை கொண்டான், அரியண்ணா உடையார், பொக்கண உடையார், கம்பண உடையார், வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி முதலியவையாம்.
🅱 *சில குறிப்புகள் 🅱
🌤 இராஜராஜன் கல்வெட்டில் மற்ற வெளியூர் கல்வெட்டுகளில் புகழ்ந்து கொள்வது போலவே தன் வெற்றிகளைக் கூறிக்கொள்கிறான். அதனைப் பின்னால் வரும் அவன் கல்வெட்டில் காண்க வீரசேகரக் காடவராயன் என்பவன் சகாப்தம் 1108-ல் (கி.பி. 1186-ல்) அதியமான் நாட்டையும், கற்கடக மாநாயனார்குச் சொந்தமான கூடலையும் அழித்ததாகக் கூறிக்கொள்கிறான். இக்கல்வெட்டு, தமிழில் செய்யுளாக உள்ளது. (1918/74) தேவன் பல்லவராயன் என்பவன், பாண்டிய மண்டலத்து முட்டூர் கூற்றம் அதன் காரிமங்கலத்தை முற்றுகை இட்டதாக் கூறிக் கொள்கிறான்.
🅱 *கோவில் அமைப்பு:* 🅱
🌤 மிகப்பெரிய கோயில். பெரிய சுற்று மதில். நாற்புரமும் கோபுரங்கள் ஏழுநிலைகளுடன் காட்சியளிக்கின்றன. கீழைக்கோபுர வாயிலின் முன்னால் வெளியே உள்ள பதினாறுகால் மண்டபத்தில் வட, தென்பாற் சுவர்களில் 72 வகையான பரதநாட்டியப் பாவனை உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
🌤 வாயிலின் உட்புறம் முன்னால் இருப்பது கைலாசப் பிராகாரம், அதில் முன்னால் உயர்ந்துள்ள கருங்கல் மண்டபம் தீபாராதனை மண்டபம் எனப்படும்.
🌤 அடுத்து மேற்புறமுள்ள பெரிய மண்டபம் நந்தி மண்டபம். ஆடிப்பூரத்தில் கல்யாணப் பெருவிழா இங்கு தான் நடைபெறும். இதன் தென் பாலுள்ளது விபச்சித்து முனிவர் மண்டபம் ஆகும். மாசிமகத்தில் 6ஆம் நாள் விழாவில் - இவ்வொரு நாளில் மட்டுமே உலா வருகின்ற - உற்சவ மூர்த்தி பெரிய நாயகர் காட்சி தர, விபசித்து முனிவர் தரிசிக்கும் விழா இங்குத்தான் நடைபெறுகிறது. இம்மண்டபத்தின் நேர்கிழக்கில் கிணறுவடிவத்தில் அக்னி தீர்த்தமும், அதன் தெற்கில் சொற்பொழிவு மண்டபமும் உள்ளன.
🌤 தலவிநாயகர் ஆழத்துப்பிள்ளையார், பெயருக்கேற்ப சந்நிதி ஆழத்தில் உள்ளது. இறங்குவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தனிச் சுற்றுமதிலும் கோபுரமும் கொண்டு இச்சந்நிதி விளங்குகின்றது. திருமாலின் சக்கரத்தால் உண்டாக்கப்பட்ட சக்கர தீர்த்தத்தைச் சுற்றிலும் நந்தவனம் உள்ளது. இக்கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு மூலையில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள் 29 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வைத்துப் பூசித்தார் என்பது இதன் வரலாறு. காமிகேசுவரர் முதலாக வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத்திருமேனிகள் பெற்றுள்ளன.
🌤 பெரிய நாயகி கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. தனிக்கோபுரம் உள்ளது. அம்பிகை - விருத்தாம்பிகை சந்நிதி. பெரிய கோயிலின் முன்னால் வெளியில் உள்ள அலங்கார மண்டபத்தில் கொடி மரமும் நந்தியும் உள்ளன. அருகில் குகை முருகன் சந்நிதியும் இங்கு வாழ்ந்து சாரூப நிலையடைந்த நாதசர்மா, அநவர்த்தினி ஆகியோரின் பெயர்களில் அமைந்த கோயில்களும் உள்ளன.
🌤 பக்கத்தில் குபேர தீர்த்தம். அடுத்துள்ளது யாகசாலை மண்டபம். தென்புறமுள்ள நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமையானது. சக்கரங்கள் பொருந்தி குதிரைகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதுவே கைலாசப் பிராகாரத்தின் முடிவு.
🌤 அடுத்துள்ளது இரண்டாவது சுற்றுமதில். உட்பிராகாரத்திற்கு வன்னியடிப் பிராகாரம் என்று பெயர். மடைப்பள்ளிக்குப் பக்கத்தில் தலமரமான வன்னிமரம் உள்ளது. இங்குள்ள மேடையில் விநாயகர், விபச்சித்துமுனிவர், உரோமேச முனிவர், விதர்க்கண செட்டி (வழிபட்டுச் சிவகணமான ஓர் அன்பர்) குபேரன் தங்கை முதலியோரின் உருவங்களும் உள்ளன. வன்னியடிப் பிராகாரத்தில் பஞ்சலிங்கங்கள் உள. வல்லபை கணபதி, மீனாட்சி சொக்கலிங்கம், விசுவநாதலிங்கம், ஆறுமுகர், ஸஹஸ்ர லிங்கம், ஏகாம்பர லிங்கம், ஜம்புலிங்கம், அண்ணாமலையார் முதலிய சந்நிதிகள் உள்ளன.
🌤 பெரிய நாயகி கோயிலுக்கு இப் பிராகாரத்திலிருந்து செல்வதற்கு அமைந்துள்ள வாயிலில் நவக்கிரகங்களும் தண்டபாணி சந்நிதியும் உள்ளன. இசை மண்டபம் (அ) அலங்கார மண்டபமே உற்சவரான பெரிய நாயகர் எழுந்தருளியுள்ள இடமாகும். எல்லாத் திருமஞ்சனச் சிறப்பும் இங்கு இவருக்குத்தான். இவர் ஆண்டில் ஒரு நாள் மட்டும் -அதாவது மாசி மகம். ஆறாம் நாள் விழாவில் - வெளியில் உலா வருவார். மற்ற விழாக் காலங்களில் சிறிய பழமலை நாயகர் வெளியில் உலா வருவது மரபு.
🌤 பௌர்ணமி, பிரதோஷ காலங்களில் பெரிய நாயகரை ஏராளமான மக்கள் வந்து வழிபடுகின்றனர்.
🌤 பெரிய நாயகர் உற்சவ மூர்த்தியாதலின் நாடொறும் அலங்கார தீபாராதனைகள் அனைத்தும் *'உடையவர்'* எனப்படும் ஸ்படிகலிங்கத்திற்கே செய்யப்படுகின்றன.
🌤 இசை மண்டபத்தின் வடபால் உள்ள நடராசசபையுடன் வன்னியடிப் பிராகாரம் நிறைவாகிறது.
🌤அடுத்து மூன்றாவது (உள்) சுற்று மதிலைக் கடந்தால் அறுபத்து மூவர் பிராகாரத்தை அடையலாம். நால்வர், விநாயகர், அறுபத்துமூவர், ரிஷபாரூடர், யோக தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், உருத்திரர், மாற்றுரைத்த விநாயகர் முதலிய திருவுருவங்கள் உள்ளன.
🌤 அடுத்துள்ளவை வருணலிங்கம், முப்பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, ஆகியவை. சின்னப்பழமலை நாதர், (உற்சவர்) வள்ளி தெய்வயானை சமேத முருகர், வல்லபை கணபதி, பிந்து மாதவப் பெருமாள், மயூர முருகன் முதலிய சந்நிதிகளை அடுத்துத் தரிசிக்கலாம்.
🌤 இளமை நாயகி (பாலாம்பிகை) கோயில் உள்ளது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இளமை நாயகிக்குத் தனிக்கோயில் உள்ளது. கஜலட்சுமி, பைரவர், சூரியலிங்கம், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
🌤 அடுத்து மகாமண்டபத்தையடைகிறோம். உள்ளிருப்பது ஸ்தபன மண்டபம், துவார பாலகர்களைத்தொழுது சென்று கர்ப்பக்கிருகத்தில் மூலவராகிய பழமலை நாதரைத் தரிசிக்கிறோம் - மனநிறைவான தரிசனம்.
🌤 இத்தலத்தில் குருநமசிவாயர் பற்றிச்சொல்லப்படும் ஒரு வரலாறு வருமாறு -
🍁 *குருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து தில்லை சென்றார். வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார்.*
🍁 *பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து*
*"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி*
*என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற*
*நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி*
*மலைக் கிழத்தி சோறு கொண்டு வா"* - என்று பாடினார்.
🍁 பெரிய நாயகி, முதியவடிவில் எதிர்தோன்றி, *"எனைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?"* கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டுவர முடியும் என்று கேட்க, குருநமசிவாயர்
*"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே*
*பத்தர் பணியும் பதத்தாளே -அத்தன்*
*இடத்தாளே முற்றா இளமுலை மேலார*
*வடத்தாளே சோறு கொண்டு வா"* என்று பாடினார்.
🍁 *அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. இதனால் உண்டானதே பாலாம்பிகை கோயிலாகும்.*
🍁 *இக்கோயில் பலகாலங்களில் பலரால் திருப்பணிகள் பல செய்யப்பட்டுத் திகழ்கின்றது. ஆதியில் விபச்சித்து முனிவர் முதன் முதலில் இக்கோயில் திருப்பணியைச் செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. பின்பு 10ஆம் நூற்றாண்டில் செம்பியன் மாதேவியால் மூலவர் கருவறை ஸ்தபன மண்டபம். பரிவாரக் கோயில்கள், வன்னியடிப்பிராகாரக் கோயில்கள் முதலியவை திருப்பணிகள் செய்யப்பட்டன.*
🌤 *இசை மண்டபம் குலோத்துங்க சோழன் காலத்தில் (A.H 1193-ல்) ஏழிசைமோகனான குலோத்துங்க சோழக்காடவராதித்தன் என்பவனால் கட்டப்பட்டது. மாசிமக ஆறாம் நாள் விழா நடைபெறும் இடமாக உள்மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் கிராமத்தில் வாழ்ந்த உடையார் ஒருவரால் கட்டப்பட்டது.*
🌤 A.H. 1813 முதல் 1926 வரை தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த ஹைட்துரை' என்பவர் கைலாச பிராகாரத்திற்குத் தளவரிசை போட்டுத் தந்துள்ளார். அத்துடன் தேர்இழுக்க இரும்புச் சங்கிலியும், கும்ப தீபாராதனைக்காக வெள்ளிக் குடமும் வாங்கித் தந்துள்ளார் என்னும் செய்தி இம்மாவட்ட கெஜட்டால் தெரிய வருகின்றது. இத்துறையின் பெயரால் இன்றும் இவ்வூரில் தென்கோட்டை வீதியில் ஒரு சத்திரம் உள்ளது - (ஹைட் சத்திரம்) . இக்கோயிலிலிருந்து 72 கல்வெட்டுக்கள் படியெடுத்து வெளியிடப்பட்டுள்ளன.
🌤 இவை கண்டராதித்தன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், விக்கிரமசோழன் இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பாண்டியர், பல்லவர் விஜயநகர மன்னர் முதலானோரின் காலத்தியவை.
🌤 இக்கல்வெட்டுக்களில் இருந்து வேதமோதவும், புராணம் படிக்கவும் திருமுறைப் பாராயணம் செய்யவும், பணியாளர்கட்குத் தரவும், நந்தவனம் வைக்கவும் நிலமும் பொன்னும் பொருளும் நெல்லும் கொடுத்த செய்திகள் அறியக்கிடக்கின்றன. வாங்கிய கடனைத் திருப்பித்தராத ஒருவனுக்குத் தண்டனையாக கோயில் விளக்கிடுமாறு பணித்த செய்தியன்றும் ஒரு கல்வெட்டால் தெரிய வருகிறது.
🌤 பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் என்பவன், தான் போர்க்களத்தில் பலரைக் கொன்ற பழி நீங்குவதற்காகப் பழமலைநாதருக்கு வைரமுடி ஒன்று செய்துதந்து அதற்கு அவனியாளப் பிறந்தான் என்று பெயரும் சூட்டினான் என்பதும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியாகும்.
🌤 கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், *'திருமுதுகுன்றம் உடையார்' 'ராஜேந்திரசிம்ம வளநாட்டு இருங்கொள்ளிப்பாடி பழுவூர்க் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் உடையார்க்கு'* என்று குறிக்கப்படுகிறது.
🅱 *தல வரலாறு:*🅱
 ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான மதுகைடவர்களை வெட்டி வீழ்த்த நேர்ந்தது. வெட்டுண்ட அவ்வுடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன. நான்முகன் அதைக் கண்டார். நீரும் அவ்வுடல் அற்ற தசைகளும் ஒன்றாக ஈறுகி மண்ணுலகம் தோன்றுமாறு சிவபெருமானை வேண்டினார்.
 சிவபெருமான் ஒரு மலை வடிவாகத் தோன்றி எதிர் நின்றார். மலரவன் அதனை அறியாது வேறு பல மலைகளைப் படைத்தார். தான் படைத்த மலைகளுக்கு இருக்க இடம் இல்லை. பெரிதும் வருந்தி மயங்கி நின்றார்.
 பிரணவ கடவுள் தோன்றிக் குறிப்பால் உண்மையை உணர்த்தினார். நான்முகன் நல்லறிவு பெற்று உடனே மலை வடிவாய் நின்ற சிவபெருமானை வழிபட்டுப் பூஜித்தார்.
 சிவபெருமான், மேதையும் (தசையும்) நீரும் ஒன்றாக இறுகி மண்ணுலகம் தோன்றுமாறு செய்தார். அதற்கு மேதினி என்று பெயரிட்டார். மலரவன் படைத்த மலைகளுக்கும் இடம் தந்தார். மலரவனை நோக்கி, ஏ அறிவிலி! நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம். நான் வேறு இம்மலை வேறு இல்லை. இந்த மலை தோன்றிய பின்னரே உன்னால் பல மலைகள் தோன்றின. ஆதலில், நம் மலைக்குப் பழமலை என்றே பெயர் வழங்குவதாகுக. மற்றும், இப்பழமலை மண்ணுலகுக்கு அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிப்பட்டோர் எவரும் விரும்பிய பயனை எய்தி இன்புறுவர் என்று அருள் செய்து மறைந்தருளினார் என்பர்.
🅱 *சிறப்பம்சம்:*🅱
 *அதிசயத்தின் அடிப்படையில்:*
 இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் மிகப் பிரமாண்டமான தேவார பாடல் பெற்ற தலம்.
 மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம் என ஐந்து தீர்தங்களை கொண்ட புராதான சிவாலயம்.
 திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.என்ற பெயர்களைக்கொண்ட வன்னி மரத்தை தல விருட்சமாக கொண்ட அற்ப்புதமான சிவாலயம்.
 திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற நடு நாட்டு பாடல் புகழ் பெற்ற தலங்களில் ஒன்பதாவது தலம்.
 உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.இவர்கள் ஐவருக்கும் இறைவன் காட்சியளித்த தலம்.
 விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி என்ற ஐந்து திருநாமங்கள் இறைவருக்கு நாம் அனைவரும் தரிசிக்க வேண்டிய உன்னதமான தலம்.
 மூவர் பாடலுடன் அருணகிரியாரின் திருப்புகழும், குமூரதேவர் பாடியுள்ள பெரியநாயகியம்மன் பதிகமும், குருநமசிவாயர் பாடியுள்ள க்ஷேத்திரக்கோவையும், வள்ளற்பெருமானின் குருதரிசனப் பதிகமும், சொக்கலிங்க அடிகளார் என்பவர் (19 -ஆம் நூற்றாண்டு) எழுதிய பெரியநாயகி பிள்ளைத் தமிழும் இத்தலத்திற்கு உள்ளன.
 சிவப்பிரகாச சுவாமிகள் பழமலையந்தாதி, பெரியநாயகியம்மை விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பிக்ஷாடன நவமணிமாலை முதலிய நூல்களைப் பாடியுள்ளார்கள்.
 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானக்கூத்தர் என்பவர்தாம் திருமுதுகுன்றத் தலபுராணத்தைத் தமிழில் பாடியுள்ளார்.
 நாடொறும் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.
"மத்தா வரை நிறுவிக்கடல் கடைந்தவ் விடமுண்ட
தொத்தார் தருமணி நீண்முடிச் சுடர் வண்ணன திடமாம்
கொத்தார் மலர் குளிர் சத்தகி லொளிர் குங்குமங் கொண்டு
முத்தாறு வந்தடி வீழ்தரு முதுகுன் றடைவோமே"
(சம்பந்தர்)
கருமணியைக் கனகத்தின் குன்றொப்பானைக்
கருதுவார்க் காற்றவெளி யான்றன்னைக்
குருமணியைக் கோளரவ மாட்டுவானைக்
கொல்வேங்கை யதளானைக் கோவணவன்றன்னை
அருமணியை யடைந்தவர்கட்கு அமுதொப்பானை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம்புக்கத்
திருமணியைத் திருமுதுகுன்றுடை யான்றன்னைத்
தீவினையே னறியாதே திகைத்தவாறே.
(அப்பர்)
மெய்யைமுற்றப் பொடிப்பூசியர்நம்பி
வேதநான்கும்விரித் தோதியர்நம்பி
கையிலோர்வெண் மமுவேந்தியர்நம்பி
கண்ணுமூன்றுடை யாயருநம்பி
செய்யநம்பிசிறுச் செஞ்சடைநம்பி
திரிபுரந்தீயெழச் செற்றதோர்வில்லா (ல்)
எய்தநம்பி யென்னையாளுடைநம்பி
யெழுபிறப்புமெங் கணம்பிகண்டாயே
(சுந்தரர்)
-'தேவகமாம்
மன்றமமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
குன்றம் அமர்ந்த அருட்கொள்கையே'
(அருட்பா)
🅱 *இருப்பிடம்:*🅱
 சென்னை - திருச்சி தொடர் வண்டி மார்க்கத்தில் விழுப்புரத்தை அடுத்துள்ள தொடர் வண்டி சந்திப்பு நிலையம், திருச்சியிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🎠 இ றை ய ன் பி ல் 🎠
🌤 *மூ.ரா.பாரதிராஜா/8447534825 ; 7011992634*🌤
•┈┈• ❀❀ •┈┈• ❀❀ •┈┈• ❀❀ •┈┈•🙏🏽 *தினம் ஒரு திருக்கோவில்:*🙏🏽
🍁🌤🍁🌤 *BRS*🍁🌤🍁🌤🍁
*சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்ற ஸ்தலம் ; காசியை காட்டிலும் மேம்பட்ட தலம் ; பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் சிவயாலயம்..*
🔵🔵 *BRS*🔵🔵🔵
*அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் , கடலூர்*
தொலைப்பேசி : *+91- 4143-230 203.*
🦋🎸🦋🎸 *BRS*🦋🎸🦋🎸🦋
மூலவர்: *விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்)*
அம்மன்/தாயார்: *விருத்தாம்பிகை (பாலாம்பிகை - இளைய நாயகி)*
தல விருட்சம்: *வன்னிமரம்*
தீர்த்தம்: *மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்*
ஆகமம்/பூஜை: *காமிகம்*
பழமை: *1000-2000 வருடங்களுக்கு முன்*
புராண பெயர்: *திருமுதுகுன்றம்*
ஊர்: *விருத்தாச்சலம்*
பாடியவர்கள்: *திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்*
🅱 தேவாரப்பதிகம்:🅱
*ஆடிஅசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ் முதுகுன்றரே.* - சுந்தரர்.
🌱 *தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9 வது தலம்.* 🌱
🅱 திருவிழாக்கள் :🅱
🌻 *பிரம்மோற்சவம் - மாசி மாதம் - 10நாட்கள் 9 வது நாள் தேர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும்,*
🌻 *ஆடிப்பூரம் - 10 நாட்கள் திருவிழா - அம்பாள் விசேஷம் - திருக்கல்யாணம் - கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா - ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்,*
🌻 *வசந்த உற்சவம் - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது,*
🌻 *ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும் (உற்சவர்) சிறப்பு அபிசேஹம் நடைபெறுகிறது.*
🌻 *பௌர்ணமி அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.*
🅱 தல சிறப்பு:🅱
🎭 *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*
🎭 *ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது.*
🎭 *தல விருட்சம் வன்னிமரம் 1700 ஆண்டுகள் பழமையானது.*
🎭 *இத்தலத்தில் பிறந்தால், வாழ்ந்தால், வழிபட்டால், நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட முக்தி நிச்சயம்.*
🎭 *இத்தலத்தில் ராஜகோபுரத்தை அடுத்து இடது பக்கம் உள்ள ஆழத்து விநாயகர் சன்னதி விநாயகரின் இரண்டாவது படை வீடாகும். காளஹஸ்தியில் உள்ளது போல, இவர் 18 படியிறங்கி சென்று தரிசிக்கும்படி அமர்ந்துள்ளார். இந்த ஆழத்து விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.*
🎭 *இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.*
🎭 *குமார தேவர், குருநமச்சிவாயர், சிவப்பிரகாசர், ராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாடியுள்ளனர்.*
🎭 *சம்பந்தரால், இத் தலத்தை அடையும் போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப் பெற்ற பெருமையுடையது.*
🎭 *ஒருமுறை உலகம் அழிந்த போது இந்தத்தலம் மட்டும் அழியாமல் இருந்தது என்ற புராணச் சிறப்பைப் பெற்றது.*
🎭 *சிவத்தலங்கள் அனைத்திலும் 1008 தலங்கள் சிறப்பானதாக கூறப்படும். இதில் நான்கு தலங்கள் முக்கியமானவை. அதில் விருத்தாசலமும் ஒன்று.*
🎭 *இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.*
"தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
(கந்தபுராணம் - வழிநடைப்படலம்)
🎭 ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது.
🎭 *சுந்தரர், இறைவனைப் பாடிப் பன்னீராயிரம் பொன்பெற்று அவற்றை மணிமுத்தாறு நதியிலிட்டு, திருவாரூர் கமலாயக் குளத்தில் பெற்றார்.*
🎭 *இத்தலத்தின் பெயரில் 'குன்றம்' என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன.*
🎭 *எல்லா மலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை - முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் - பழமை, அசலம் - மலை) வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடமே புண்ணிய மடு எனப்படுவதாகும்.*
🎭 *சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 220 வது தேவாரத்தலம் ஆகும்.*
🅱 நடை திறப்பு:🅱
🗝 *காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.*🗝
🅱 பொது தகவல்:🅱
🍁 *ஆகம கோவில்கள் ( 28 லிங்கங்கள்)  🍁
🦋 *சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார்.*
🦋 *இந்த லிங்கங்கள் கோயிலின் வடமேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன.*
🦋 *இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.*
🦋 *28 ஆகமங்களுக்குரிய பெயர்களான காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன.*
🦋 *இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.*
🅱 விருத்தாச்சலம் பெயர்காரணம் : 🅱
🦋 *"விருத்த'* என்றால் *"முதுமை'* என்றும் *"அசலம்'* என்றால் *"மலை'* என்றும் பொருள்படும். எனவே *"விருத்தாசலம்'* என்றால் *"பழமலை'* என்பது கருத்தாகிறது. தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் *திருமுதுகுன்றம்* என்று போற்றப்படுகின்றது.
🅱 *பிரார்த்தனை:*🅱
🌹 இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.
🌹 இத்தலத்து துர்க்கையம்மனை வழிபடுவோர்க்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது.மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
🌹 ஞாயிறு அன்று ராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால் அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.
🌹 இத்தலத்து பெருமானை வழிபட்டால் இம்மைபயன்களும், மறுமையபயன்களும் கிடைக்கும் என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
🌹 முத்தாநதியில் நீராடினால் சித்தி பெறுவதுடன் முக்தியும் கிட்டும் என்று புராண நூல்கள் கூறுகின்றன.
🅱 *நேர்த்திக்கடன்:*🅱
💥 சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.
💥 இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம்.
🅱 *தலபெருமை:*🅱
🍁 *சக்கரங்கள் அமைந்த முருகப்பெருமான் 🍁
🔥 *ஈசன் சன்னதிக்கும் விருத்தாம்பிகை சன்னதிக்கும் இடையில் அமைந்து உள்ளது 28 சிவலிங்கங்களுடன் உடனுறையும் முருகன் வள்ளி தெய்வானை காட்சியாகும்.*
🔥 *முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற திருக்கோலக்காட்சியும் 28 சிவலிங்கங்கள் ஆகம விதிப்படி அமையப்பெற்று அனைவராலும் வணங்கப்பட்டு வருவது மிகவும் சிறப்பிற்குரியதாகும்.*
🔥 *நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் உடனுறைக்கு மேலே சக்கரங்கள் அமைந்தது எல்லா வளமும் கிட்டும் என்பதை நினைவுறுத்துகின்றன. இது போல சக்கரங்கள் அமைந்திருப்பது சில திருத்தலங்களில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.*
🅱 எல்லாமே ஐந்து: 🅱
🔥 *இக்கோயிலில் எல்லாமே ஐந்து தான்.*
💧ஐந்து மூர்த்தங்கள்: 💧
*விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்.*
🔥 இறைவனின் ஐந்து திருநாமம்: 🔥
*விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி.*
🔥 ஐந்து விநாயகர்: 🔥
*ஆழத்து விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், தசபுஜ கணபதி, வல்லப கணபதி.*
🔥இறைவனை தரிசனம் கண்ட ஐவர்: 🔥
*உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.*
🔥 ஐந்து கோபுரம்:🔥
*கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்.*
🔥 ஐந்து பிரகாரம் (திருச்சுற்று): 🔥
*தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று.*
🔥ஐந்து கொடிமரம்:🔥
*இந்த கொடி மரங்களின் முன்புள்ள நந்திகளுக்கு இந்திரநந்தி, வேதநந்தி, ஆத்மநந்தி, மால்விடைநந்தி, தர்மநந்தி என்று பெயர்.*
🔥ஐந்து உள் மண்டபம்:🔥
*அர்த்த மண்டபம், இடைகழி மண்டபம், தபன மண்டபம், மகா மண்டபம், இசை மண்டபம்.*
🔥ஐந்து வெளி மண்டபம்: 🔥
*இருபது கால் மண்டபம், தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபசித்து மண்டபம், சித்திர மண்டபம்.*
🔥ஐந்து வழிபாடு:🔥
*திருவனந்தல், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம்.*
🔥ஐந்து தேர்:🔥
*விநாயகர் தேர், முருகன் தேர், பழமலை நாதர் தேர், பெரியநாயகி தேர், சண்டிகேஸ்வரர் தேர்.*
🔥தலத்தின் ஐந்து பெயர்: 🔥
*திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.*
🅱 முத்தா நதியில் பொன் : 🅱
🔥 *ஒருமுறை, சுந்தரர் திருவாரூரில் நடக்கும் பங்குனி உத்திர விழவில் அடியார்களுக்கு அன்னதானம் செய்ய பொருள் சேகரிக்க ஒவ்வொரு தலமாகச் சென்றார். இத்தலம் வரும் போது இறைவன் சுந்தரருக்கு 12 ஆயிரம் பொன்னைத் தந்தார். திருவாரூர் செல்லும் வழியில் கள்வருக்கு பயந்து, இந்த பொன் அனைத்தையும் இங்குள்ள மணிமுத்தா நதியில் போட்டு விட்டு இறைவனின் அருளால் திருவாரூர் குளத்தில் மூழ்கி எடுத்தார். இதை அடிப்படையாகக் கொண்டே, "ஆற்றிலே போட்டு குளத்தில் தேடுவது போல்' என்ற பழமொழி தோன்றியது.*
🔥 *இறைவன் தந்த பொன் மாற்றுக்குறையாத தங்கம்தானா என்று சுந்தரர் மனம் அலைபாய்ந்ததை உணர்ந்த இறைவன் நம்பிக்கைக்காக தும்பிக்கை நாயகனை சாட்சியாக அமைத்து பொன்னை மாற்றுறைத்து காட்டினார். திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்ளவும் செய்தார். எனவே தான் இத்தலத்தில் உள் சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள விநாயக பெருமான் மாற்றுரைத்த விநாயகர் என்ற பெயரோடு விளங்குகிறார்.*
🔥 *முருகன் சிவனை பூஜித்த தலம் இது.*
🔥 *விபசித்து முனிவரால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் முதுகுன்றத் திருக்கோயில் ஆகும்.*
🔥 *மணி முத்தா நதிக்கரையில் அமைந்த முதுகுன்றம் என்பது தான் பழமலை ஆகும்.*
🔥 *மற்ற சிவ தலங்களில் துர்க்கை அம்மன் சிவன் கோயிலில் ஆட்சி செய்வதாக அமைந்தி ருக்கும். ஆனால் இந்த முதுகுன்றத்தில் துர்க்கை உமையவளான விருத்தாம் பிகையின் வடக்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் இருந்து அருளாட்சி செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.*
🔥 *தேவர்களுக்காக இறைவன் இங்கு நடனம் ஆடியுள்ளார். சிதம்பரத்தில் சிவன் போட்டிக்காக ஆடிய தலம் என்றும், இத்தலம் சிவன் சந்தோஷத்திற்காக ஆடிய தலம் என்றும் கூறுவர்.*
🔥 *இங்குள்ள அர்த்த மண்டபத்தில் 4 வேதங்களே 4 தூண்களாக அமைந்துள்ளன.*
🔥 *இக்கோயிலில் திருப்பணி செய்த விபசித்த முனிவர், தன் வேலையாட்களுக்கு சம்பளமாக இம்மரத்தின் இலைகளை பறித்து தருவார். அது அவரவர் உழைப்புக்கு ஏற்ப பொற்காசுகளாக மாறிவிடுமாம்.*
🔥 *இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது.*
🔥 *பெரியநாயகியம்மை பதிகம், க்ஷேத்திரக் கோவை வெண்பா, பழமலை நாதர் அந்தாதி, பெரியநாயகி விருத்தம், கலித்தொகை, பிட்சாடன நவமணி மாலை, குருதரிசனப்பதிகம், பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களும் இத்தலத்திற்குரியது.*
🔥 *கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.*
🅱 முக்திதலம் : 🅱
🥀 *காசியைப் போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் "விருத்தகாசி' என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் "காசியை விட வீசம் அதிகம் விருத்தகாசி' என்ற பழமொழி கூட உண்டு.*
🥀 *இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத் தலைப்பால் விசிறி அவைகளின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சம டைவதற்காக "நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்கிறார் என தலபுராணம் கூறுகிறது.*
🅱 பாலாம்பிகை : 🅱
🌤 *யுகம் கண்ட தலமான இங்குள்ள அம்மனின் திருநாமம் விருத்தாம்பிகை. ஒருமுறை திருவண்ணா மலையிலிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார். அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது.*
🌤 பசியை போக்க, இத்தல பெரியநாயகியிடம் சோறு வேண்டி, *"கிழத்தி'* என்ற சொல் வரும்படி ஒரு பாடல் பாடினார். இதை கேட்ட பெரியநாயகி கிழவி வேடத்தில் அங்கு வந்து, *""கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும் ? இளமையுடன் இருந்தால் தான் நீ கேட்டது கிடைக்கும்,''* என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர், *"அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா''* என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்து சோறு போட்டாள். அன்று முதல் *"பாலாம்பிகா'* என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.
🅱 *கல்வெட்டுக்களில் இருக்கும் அரசர்களின் பெயர்கள்  🅱
🌤 பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அவன் மனைவி செம்பியன் மாதேவி, உத்தம சோழன், இராஜ ராஜ சோழன், இராஜேந்திர சோழன், இராஜாஜி ராஜ சோழன், விக்கிரம சோழன், 2-ம் இராஜராஜ சோழன், 3-ம் குலோத்துங்க சோழன், ஏழிசை மோகனான குலோத்துங்க சோழ காடவராதித்தன், வீரசேகர காடவராயன், அரச நாராயணன் கச்சிராயன், கோப்பெருஞ்சிங்கன், கச்சிராயன் எனும் அரச நாராயணன் ஏழிசை மோகன், விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன், மாவர்ம பாண்டியன், கோனேரின்மை கொண்டான், அரியண்ணா உடையார், பொக்கண உடையார், கம்பண உடையார், வீரவிஜயராயர், முப்பிடி கிருஷ்ணபதி முதலியவையாம்.
🅱 *சில குறிப்புகள் 🅱
🌤 இராஜராஜன் கல்வெட்டில் மற்ற வெளியூர் கல்வெட்டுகளில் புகழ்ந்து கொள்வது போலவே தன் வெற்றிகளைக் கூறிக்கொள்கிறான். அதனைப் பின்னால் வரும் அவன் கல்வெட்டில் காண்க வீரசேகரக் காடவராயன் என்பவன் சகாப்தம் 1108-ல் (கி.பி. 1186-ல்) அதியமான் நாட்டையும், கற்கடக மாநாயனார்குச் சொந்தமான கூடலையும் அழித்ததாகக் கூறிக்கொள்கிறான். இக்கல்வெட்டு, தமிழில் செய்யுளாக உள்ளது. (1918/74) தேவன் பல்லவராயன் என்பவன், பாண்டிய மண்டலத்து முட்டூர் கூற்றம் அதன் காரிமங்கலத்தை முற்றுகை இட்டதாக் கூறிக் கொள்கிறான்.
🅱 *கோவில் அமைப்பு:* 🅱
🌤 மிகப்பெரிய கோயில். பெரிய சுற்று மதில். நாற்புரமும் கோபுரங்கள் ஏழுநிலைகளுடன் காட்சியளிக்கின்றன. கீழைக்கோபுர வாயிலின் முன்னால் வெளியே உள்ள பதினாறுகால் மண்டபத்தில் வட, தென்பாற் சுவர்களில் 72 வகையான பரதநாட்டியப் பாவனை உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
🌤 வாயிலின் உட்புறம் முன்னால் இருப்பது கைலாசப் பிராகாரம், அதில் முன்னால் உயர்ந்துள்ள கருங்கல் மண்டபம் தீபாராதனை மண்டபம் எனப்படும்.
🌤 அடுத்து மேற்புறமுள்ள பெரிய மண்டபம் நந்தி மண்டபம். ஆடிப்பூரத்தில் கல்யாணப் பெருவிழா இங்கு தான் நடைபெறும். இதன் தென் பாலுள்ளது விபச்சித்து முனிவர் மண்டபம் ஆகும். மாசிமகத்தில் 6ஆம் நாள் விழாவில் - இவ்வொரு நாளில் மட்டுமே உலா வருகின்ற - உற்சவ மூர்த்தி பெரிய நாயகர் காட்சி தர, விபசித்து முனிவர் தரிசிக்கும் விழா இங்குத்தான் நடைபெறுகிறது. இம்மண்டபத்தின் நேர்கிழக்கில் கிணறுவடிவத்தில் அக்னி தீர்த்தமும், அதன் தெற்கில் சொற்பொழிவு மண்டபமும் உள்ளன.
🌤 தலவிநாயகர் ஆழத்துப்பிள்ளையார், பெயருக்கேற்ப சந்நிதி ஆழத்தில் உள்ளது. இறங்குவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. தனிச் சுற்றுமதிலும் கோபுரமும் கொண்டு இச்சந்நிதி விளங்குகின்றது. திருமாலின் சக்கரத்தால் உண்டாக்கப்பட்ட சக்கர தீர்த்தத்தைச் சுற்றிலும் நந்தவனம் உள்ளது. இக்கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு மூலையில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள் 29 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வைத்துப் பூசித்தார் என்பது இதன் வரலாறு. காமிகேசுவரர் முதலாக வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத்திருமேனிகள் பெற்றுள்ளன.
🌤 பெரிய நாயகி கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. தனிக்கோபுரம் உள்ளது. அம்பிகை - விருத்தாம்பிகை சந்நிதி. பெரிய கோயிலின் முன்னால் வெளியில் உள்ள அலங்கார மண்டபத்தில் கொடி மரமும் நந்தியும் உள்ளன. அருகில் குகை முருகன் சந்நிதியும் இங்கு வாழ்ந்து சாரூப நிலையடைந்த நாதசர்மா, அநவர்த்தினி ஆகியோரின் பெயர்களில் அமைந்த கோயில்களும் உள்ளன.
🌤 பக்கத்தில் குபேர தீர்த்தம். அடுத்துள்ளது யாகசாலை மண்டபம். தென்புறமுள்ள நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமையானது. சக்கரங்கள் பொருந்தி குதிரைகள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதுவே கைலாசப் பிராகாரத்தின் முடிவு.
🌤 அடுத்துள்ளது இரண்டாவது சுற்றுமதில். உட்பிராகாரத்திற்கு வன்னியடிப் பிராகாரம் என்று பெயர். மடைப்பள்ளிக்குப் பக்கத்தில் தலமரமான வன்னிமரம் உள்ளது. இங்குள்ள மேடையில் விநாயகர், விபச்சித்துமுனிவர், உரோமேச முனிவர், விதர்க்கண செட்டி (வழிபட்டுச் சிவகணமான ஓர் அன்பர்) குபேரன் தங்கை முதலியோரின் உருவங்களும் உள்ளன. வன்னியடிப் பிராகாரத்தில் பஞ்சலிங்கங்கள் உள. வல்லபை கணபதி, மீனாட்சி சொக்கலிங்கம், விசுவநாதலிங்கம், ஆறுமுகர், ஸஹஸ்ர லிங்கம், ஏகாம்பர லிங்கம், ஜம்புலிங்கம், அண்ணாமலையார் முதலிய சந்நிதிகள் உள்ளன.
🌤 பெரிய நாயகி கோயிலுக்கு இப் பிராகாரத்திலிருந்து செல்வதற்கு அமைந்துள்ள வாயிலில் நவக்கிரகங்களும் தண்டபாணி சந்நிதியும் உள்ளன. இசை மண்டபம் (அ) அலங்கார மண்டபமே உற்சவரான பெரிய நாயகர் எழுந்தருளியுள்ள இடமாகும். எல்லாத் திருமஞ்சனச் சிறப்பும் இங்கு இவருக்குத்தான். இவர் ஆண்டில் ஒரு நாள் மட்டும் -அதாவது மாசி மகம். ஆறாம் நாள் விழாவில் - வெளியில் உலா வருவார். மற்ற விழாக் காலங்களில் சிறிய பழமலை நாயகர் வெளியில் உலா வருவது மரபு.
🌤 பௌர்ணமி, பிரதோஷ காலங்களில் பெரிய நாயகரை ஏராளமான மக்கள் வந்து வழிபடுகின்றனர்.
🌤 பெரிய நாயகர் உற்சவ மூர்த்தியாதலின் நாடொறும் அலங்கார தீபாராதனைகள் அனைத்தும் *'உடையவர்'* எனப்படும் ஸ்படிகலிங்கத்திற்கே செய்யப்படுகின்றன.
🌤 இசை மண்டபத்தின் வடபால் உள்ள நடராசசபையுடன் வன்னியடிப் பிராகாரம் நிறைவாகிறது.
🌤அடுத்து மூன்றாவது (உள்) சுற்று மதிலைக் கடந்தால் அறுபத்து மூவர் பிராகாரத்தை அடையலாம். நால்வர், விநாயகர், அறுபத்துமூவர், ரிஷபாரூடர், யோக தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், உருத்திரர், மாற்றுரைத்த விநாயகர் முதலிய திருவுருவங்கள் உள்ளன.
🌤 அடுத்துள்ளவை வருணலிங்கம், முப்பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, ஆகியவை. சின்னப்பழமலை நாதர், (உற்சவர்) வள்ளி தெய்வயானை சமேத முருகர், வல்லபை கணபதி, பிந்து மாதவப் பெருமாள், மயூர முருகன் முதலிய சந்நிதிகளை அடுத்துத் தரிசிக்கலாம்.
🌤 இளமை நாயகி (பாலாம்பிகை) கோயில் உள்ளது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இளமை நாயகிக்குத் தனிக்கோயில் உள்ளது. கஜலட்சுமி, பைரவர், சூரியலிங்கம், சூரியன் சந்நிதிகள் உள்ளன.
🌤 அடுத்து மகாமண்டபத்தையடைகிறோம். உள்ளிருப்பது ஸ்தபன மண்டபம், துவார பாலகர்களைத்தொழுது சென்று கர்ப்பக்கிருகத்தில் மூலவராகிய பழமலை நாதரைத் தரிசிக்கிறோம் - மனநிறைவான தரிசனம்.
🌤 இத்தலத்தில் குருநமசிவாயர் பற்றிச்சொல்லப்படும் ஒரு வரலாறு வருமாறு -
🍁 *குருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து தில்லை சென்றார். வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார்.*
🍁 *பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து*
*"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி*
*என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற*
*நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி*
*மலைக் கிழத்தி சோறு கொண்டு வா"* - என்று பாடினார்.
🍁 பெரிய நாயகி, முதியவடிவில் எதிர்தோன்றி, *"எனைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?"* கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டுவர முடியும் என்று கேட்க, குருநமசிவாயர்
*"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே*
*பத்தர் பணியும் பதத்தாளே -அத்தன்*
*இடத்தாளே முற்றா இளமுலை மேலார*
*வடத்தாளே சோறு கொண்டு வா"* என்று பாடினார்.
🍁 *அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. இதனால் உண்டானதே பாலாம்பிகை கோயிலாகும்.*
🍁 *இக்கோயில் பலகாலங்களில் பலரால் திருப்பணிகள் பல செய்யப்பட்டுத் திகழ்கின்றது. ஆதியில் விபச்சித்து முனிவர் முதன் முதலில் இக்கோயில் திருப்பணியைச் செய்ததாகத் தலபுராணம் கூறுகிறது. பின்பு 10ஆம் நூற்றாண்டில் செம்பியன் மாதேவியால் மூலவர் கருவறை ஸ்தபன மண்டபம். பரிவாரக் கோயில்கள், வன்னியடிப்பிராகாரக் கோயில்கள் முதலியவை திருப்பணிகள் செய்யப்பட்டன.*
🌤 *இசை மண்டபம் குலோத்துங்க சோழன் காலத்தில் (A.H 1193-ல்) ஏழிசைமோகனான குலோத்துங்க சோழக்காடவராதித்தன் என்பவனால் கட்டப்பட்டது. மாசிமக ஆறாம் நாள் விழா நடைபெறும் இடமாக உள்மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் கிராமத்தில் வாழ்ந்த உடையார் ஒருவரால் கட்டப்பட்டது.*
🌤 A.H. 1813 முதல் 1926 வரை தென்ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த ஹைட்துரை' என்பவர் கைலாச பிராகாரத்திற்குத் தளவரிசை போட்டுத் தந்துள்ளார். அத்துடன் தேர்இழுக்க இரும்புச் சங்கிலியும், கும்ப தீபாராதனைக்காக வெள்ளிக் குடமும் வாங்கித் தந்துள்ளார் என்னும் செய்தி இம்மாவட்ட கெஜட்டால் தெரிய வருகின்றது. இத்துறையின் பெயரால் இன்றும் இவ்வூரில் தென்கோட்டை வீதியில் ஒரு சத்திரம் உள்ளது - (ஹைட் சத்திரம்) . இக்கோயிலிலிருந்து 72 கல்வெட்டுக்கள் படியெடுத்து வெளியிடப்பட்டுள்ளன.
🌤 இவை கண்டராதித்தன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், விக்கிரமசோழன் இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பாண்டியர், பல்லவர் விஜயநகர மன்னர் முதலானோரின் காலத்தியவை.
🌤 இக்கல்வெட்டுக்களில் இருந்து வேதமோதவும், புராணம் படிக்கவும் திருமுறைப் பாராயணம் செய்யவும், பணியாளர்கட்குத் தரவும், நந்தவனம் வைக்கவும் நிலமும் பொன்னும் பொருளும் நெல்லும் கொடுத்த செய்திகள் அறியக்கிடக்கின்றன. வாங்கிய கடனைத் திருப்பித்தராத ஒருவனுக்குத் தண்டனையாக கோயில் விளக்கிடுமாறு பணித்த செய்தியன்றும் ஒரு கல்வெட்டால் தெரிய வருகிறது.
🌤 பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் என்பவன், தான் போர்க்களத்தில் பலரைக் கொன்ற பழி நீங்குவதற்காகப் பழமலைநாதருக்கு வைரமுடி ஒன்று செய்துதந்து அதற்கு அவனியாளப் பிறந்தான் என்று பெயரும் சூட்டினான் என்பதும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியாகும்.
🌤 கல்வெட்டில் இறைவனின் திருப்பெயர், *'திருமுதுகுன்றம் உடையார்' 'ராஜேந்திரசிம்ம வளநாட்டு இருங்கொள்ளிப்பாடி பழுவூர்க் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் உடையார்க்கு'* என்று குறிக்கப்படுகிறது.
🅱 *தல வரலாறு:*🅱
 ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான மதுகைடவர்களை வெட்டி வீழ்த்த நேர்ந்தது. வெட்டுண்ட அவ்வுடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன. நான்முகன் அதைக் கண்டார். நீரும் அவ்வுடல் அற்ற தசைகளும் ஒன்றாக ஈறுகி மண்ணுலகம் தோன்றுமாறு சிவபெருமானை வேண்டினார்.
 சிவபெருமான் ஒரு மலை வடிவாகத் தோன்றி எதிர் நின்றார். மலரவன் அதனை அறியாது வேறு பல மலைகளைப் படைத்தார். தான் படைத்த மலைகளுக்கு இருக்க இடம் இல்லை. பெரிதும் வருந்தி மயங்கி நின்றார்.
 பிரணவ கடவுள் தோன்றிக் குறிப்பால் உண்மையை உணர்த்தினார். நான்முகன் நல்லறிவு பெற்று உடனே மலை வடிவாய் நின்ற சிவபெருமானை வழிபட்டுப் பூஜித்தார்.
 சிவபெருமான், மேதையும் (தசையும்) நீரும் ஒன்றாக இறுகி மண்ணுலகம் தோன்றுமாறு செய்தார். அதற்கு மேதினி என்று பெயரிட்டார். மலரவன் படைத்த மலைகளுக்கும் இடம் தந்தார். மலரவனை நோக்கி, ஏ அறிவிலி! நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம். நான் வேறு இம்மலை வேறு இல்லை. இந்த மலை தோன்றிய பின்னரே உன்னால் பல மலைகள் தோன்றின. ஆதலில், நம் மலைக்குப் பழமலை என்றே பெயர் வழங்குவதாகுக. மற்றும், இப்பழமலை மண்ணுலகுக்கு அச்சாணியாக அழுந்தி நின்று மேலே சிவலிங்கமாக விளங்கி நிற்கும். இதனை வழிப்பட்டோர் எவரும் விரும்பிய பயனை எய்தி இன்புறுவர் என்று அருள் செய்து மறைந்தருளினார் என்பர்.
🅱 *சிறப்பம்சம்:*🅱
 *அதிசயத்தின் அடிப்படையில்:*
 இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் மிகப் பிரமாண்டமான தேவார பாடல் பெற்ற தலம்.
 மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம் என ஐந்து தீர்தங்களை கொண்ட புராதான சிவாலயம்.
 திருமுதுகுன்றம், விருத்தகாசி, விருத்தாசலம், நெற்குப்பை, முதுகிரி.என்ற பெயர்களைக்கொண்ட வன்னி மரத்தை தல விருட்சமாக கொண்ட அற்ப்புதமான சிவாலயம்.
 திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற நடு நாட்டு பாடல் புகழ் பெற்ற தலங்களில் ஒன்பதாவது தலம்.
 உரோமச முனிவர், விபசித்து முனிவர், குமார தேவர், நாத சர்மா, அனவர்த்தினி.இவர்கள் ஐவருக்கும் இறைவன் காட்சியளித்த தலம்.
 விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர்,விருத்தாசலேஸ்வரர், முதுகுன்றீஸ்வரர், விருத்தகிரி என்ற ஐந்து திருநாமங்கள் இறைவருக்கு நாம் அனைவரும் தரிசிக்க வேண்டிய உன்னதமான தலம்.
 மூவர் பாடலுடன் அருணகிரியாரின் திருப்புகழும், குமூரதேவர் பாடியுள்ள பெரியநாயகியம்மன் பதிகமும், குருநமசிவாயர் பாடியுள்ள க்ஷேத்திரக்கோவையும், வள்ளற்பெருமானின் குருதரிசனப் பதிகமும், சொக்கலிங்க அடிகளார் என்பவர் (19 -ஆம் நூற்றாண்டு) எழுதிய பெரியநாயகி பிள்ளைத் தமிழும் இத்தலத்திற்கு உள்ளன.
 சிவப்பிரகாச சுவாமிகள் பழமலையந்தாதி, பெரியநாயகியம்மை விருத்தம், பெரியநாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பிக்ஷாடன நவமணிமாலை முதலிய நூல்களைப் பாடியுள்ளார்கள்.
 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானக்கூத்தர் என்பவர்தாம் திருமுதுகுன்றத் தலபுராணத்தைத் தமிழில் பாடியுள்ளார்.
 நாடொறும் நான்கு கால பூஜைகள் முறையாக நடைபெறுகின்றன.
"மத்தா வரை நிறுவிக்கடல் கடைந்தவ் விடமுண்ட
தொத்தார் தருமணி நீண்முடிச் சுடர் வண்ணன திடமாம்
கொத்தார் மலர் குளிர் சத்தகி லொளிர் குங்குமங் கொண்டு
முத்தாறு வந்தடி வீழ்தரு முதுகுன் றடைவோமே"
(சம்பந்தர்)
கருமணியைக் கனகத்தின் குன்றொப்பானைக்
கருதுவார்க் காற்றவெளி யான்றன்னைக்
குருமணியைக் கோளரவ மாட்டுவானைக்
கொல்வேங்கை யதளானைக் கோவணவன்றன்னை
அருமணியை யடைந்தவர்கட்கு அமுதொப்பானை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம்புக்கத்
திருமணியைத் திருமுதுகுன்றுடை யான்றன்னைத்
தீவினையே னறியாதே திகைத்தவாறே.
(அப்பர்)
மெய்யைமுற்றப் பொடிப்பூசியர்நம்பி
வேதநான்கும்விரித் தோதியர்நம்பி
கையிலோர்வெண் மமுவேந்தியர்நம்பி
கண்ணுமூன்றுடை யாயருநம்பி
செய்யநம்பிசிறுச் செஞ்சடைநம்பி
திரிபுரந்தீயெழச் செற்றதோர்வில்லா (ல்)
எய்தநம்பி யென்னையாளுடைநம்பி
யெழுபிறப்புமெங் கணம்பிகண்டாயே
(சுந்தரர்)
-'தேவகமாம்
மன்றமமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
குன்றம் அமர்ந்த அருட்கொள்கையே'
(அருட்பா)
🅱 *இருப்பிடம்:*🅱
 சென்னை - திருச்சி தொடர் வண்டி மார்க்கத்தில் விழுப்புரத்தை அடுத்துள்ள தொடர் வண்டி சந்திப்பு நிலையம், திருச்சியிலிருந்தும் விழுப்புரத்திலிருந்தும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🏹 *தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*🏹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🎠 இ றை ய ன் பி ல் 🎠
🌤 *மூ.ரா.பாரதிராஜா/8447534825 ; 7011992634*🌤
•┈┈• ❀❀ •┈┈• ❀❀ •┈┈• ❀❀ •┈┈•🙏🏽 *தினம் ஒரு திருக்கோவில்:*🙏🏽
🍁🌤🍁🌤 *BRS*🍁🌤🍁🌤🍁
*சிவபெருமானால் முதலில் (ஆதியில்) படைக்கப்பெற்ற ஸ்தலம் ; காசியை காட்டிலும் மேம்பட்ட தலம் ; பிறப்பு, வாழ்வது, வழிபடுவது, நினைப்பது, இறப்பது என ஐந்தில் ஒன்று நடந்தாலே முக்தி நிச்சயம் கிடைக்கும் சிவயாலயம்..*
🔵🔵 *BRS*🔵🔵🔵
*அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் , கடலூர்*
தொலைப்பேசி : *+91- 4143-230 203.*
🦋🎸🦋🎸 *BRS*🦋🎸🦋🎸🦋
மூலவர்: *விருத்தகிரீசுவரர் (பழமலைநாதர், முதுகுந்தர்)*
அம்மன்/தாயார்: *விருத்தாம்பிகை (பாலாம்பிகை - இளைய நாயகி)*
தல விருட்சம்: *வன்னிமரம்*
தீர்த்தம்: *மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்*
ஆகமம்/பூஜை: *காமிகம்*
பழமை: *1000-2000 வருடங்களுக்கு முன்*
புராண பெயர்: *திருமுதுகுன்றம்*
ஊர்: *விருத்தாச்சலம்*
பாடியவர்கள்: *திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர், சுந்தரர்*
🅱 தேவாரப்பதிகம்:🅱
*ஆடிஅசைந்து அடியாரும் நீரும் அகந்தொறும் பாடிப் படைத்த பொருளெலாம் உமையாளுக்கோ மாட மதிலணி கோபுரம் மணி மண்டபம் மூடி முகில்தவழ் சோலை சூழ் முதுகுன்றரே.* - சுந்தரர்.
🌱 *தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 9 வது தலம்.* 🌱
🅱 திருவிழாக்கள் :🅱
🌻 *பிரம்மோற்சவம் - மாசி மாதம் - 10நாட்கள் 9 வது நாள் தேர் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும்,*
🌻 *ஆடிப்பூரம் - 10 நாட்கள் திருவிழா - அம்பாள் விசேஷம் - திருக்கல்யாணம் - கொடி ஏற்றி அம்பாள் வீதி உலா - ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்,*
🌻 *வசந்த உற்சவம் - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகிறது,*
🌻 *ஒவ்வொரு பௌர்ணமியன்றும் பெரியநாயகருக்கும் (உற்சவர்) சிறப்பு அபிசேஹம் நடைபெறுகிறது.*
🌻 *பௌர்ணமி அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவர்.*
🅱 தல சிறப்பு:🅱
🎭 *இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.*
🎭 *ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் கிரிவலம் நடைபெறுகிறது.*
🎭 *தல விருட்சம் வன்னிமரம் 17.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...