Saturday, June 24, 2017

தமிழர்கள் நாமும் பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்வோம்.,

வட
இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டோம் ;
கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம்
 கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம் ;
பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம்,
சப்புக்கொட்டி.
மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம்.
தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனையும் தமிழையும் சேர்த்தே விரட்டினார்கள் பொறுத்துக்
கொண்டோம்
இலங்கையில் கொன்றார்கள் பொறுத்துக்
கொண்டோம்
கச்சத்தீவு இல்லை.
பொறுத்துக்
கொண்டோம்
அணுமின் நிலையம்
பொறுத்துக்
கொண்டோம்
கெயில் குழாய் பதிப்பு
பொறுத்துக்
கொண்டோம்
நியூட்ரினோ ஆராய்ச்சி
பொறுத்துக்
கொண்டோம்
ஆத்து மணல் கொள்ளை/ மலைகள் குவாரி பொறுத்துக்
கொண்டோம்
ஆந்திராவில் கொன்றார்கள் பொறுத்துக்
கொண்டோம்
கர்நாடகாவில் எரித்தார்கள் பொறுத்துக்
கொண்டோம்
முல்லை பெரியாறில் விரட்டினார்கள் பொறுத்துக்
கொண்டோம்
இனி நீட் மூலம்
 இங்குள்ள
மருத்துவ
மனைகளுக்கும் வியாபாம் மாதிரி சதி செய்து பின்வாசல் வழியாக வந்து விடுவார்கள். பொறுத்துக்
கொள்வோம்.
தமிழக மாணவர்களுக்கு திறமை குறைந்து விட்டது என தாமரைக் கட்சியினர் சொல்வர்.
நாளை தமிழர்களுக்கு தமிழ் படிக்கவே தகுதியில்லை என்று ஹிந்தியை திணித்து தமிழை அழிப்பார்கள் பொறுத்துக்
கொள்வோம்
தமிழர்கள் நாமும் பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்வோம்.,
நமக்குத்தான்
இலவச அரிசியும், பொழுது கழிக்க நூறு நாள் வேலையும், களைப்பு நீங்க சரக்கும், திரையில் சினிமாவும், சண்டையிட்டு சாக சாதியும் எளிதாக கிடைக்கிறதே.
இப்படிக்கு
*சாதி மதத்தால் பிளவுபட்டு, தனித்தொன்மை வரலாற்றின் வீரமும் மானத்தையும் இழந்து அழிவின் விளிம்பில் நிற்கும் ஒரு நாதியற்ற இனத்தின் மகன்.....!!!!!!!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...