Monday, June 26, 2017

ந‌மது உடலில் அடிக்கடி ஏற்படும் வலிகளும் அதற்கான நிவாரணிகளும்!

ஓடியாடி வேலை செய்த காலம் போய், ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதேபோல் அத்துட ன் உடலில் பல வலிகளும் அதிகரித்து வி ட்டது. இதற்கு முக்கிய காரணம், போதி ய ஓய்வு இல்லாதது, உடற்பயிற்சி செய்யா தது, தூக்கமின்மை என்று சொல்ல ஆரம் பித்தால், சொல்லிக்கொண்டேபோகலாம்.
மேலும் இத்தகைய செயலால் உடலில் நாள்பட்ட வலிகள் தங்கி, உடலின் ஆரோ க்கியத்தையே கெடுத்துவிடுகிறது. இதற்காக எத்தனையோ மருந்து மாத்திரைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அவை தற் காலிகமானவையே தவிர, நிரந்தரமா னவை அல்ல. மேலும் இவ்வாறு மாத் திரைகளை அதிகம் எடுத்துக்கொண் டால், அவை இதயம் மற்றும் சிறு நீரக த்திற்கு பெரும் அழுத்தத்தைக் கொடு த்துவிடும். எனவே மருந்து மாத்திரை களை எடுத்துக் கொள்வதைவிட, இய ற்கை பொருட்களால் சரிசெய்வதன் மூலம், அதிலிருந்து நிரந்தரத் தீர்வையும் பெறலாம்.
ஆனால் பலர் இயற்கை பொருட்கள் நல்ல தீர்வைத் தருவதில்லை என் று அதனை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. உடலில் உள்ள பிரச்சனைகளை உடனே சரிசெய்யும் பொருட்கள் எப்போதுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. எந்த ஒரு பொருள் மெது வாக பிரச்சனைகளை சரிசெய்கிறதோ, அது அந்த பிரச்ச னையை முற்றிலும் சரி செய்து விடும்.
அதுமட்டுமல்லாமல், எந்த வலிக்கு எந்த பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சரியாக தெரியாததா ல் , பலரால் இயற்கை பொருட்களால் நல்ல பலனை உட னே பெற முடிவதில்லை. இப்போது அப்படி உடலில் ஏற் படும் பல்வேறு வலிகளை சரிசெய்யும் சில நிவாரணிக ளைப் பார்ப்போமா!!!
தொண்டை வலி – தேன்:
தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்ல து அதனால் ஏற்படும் வலியை போ க்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக் கும்.
ஒற்றை தலைவலி – காபி:
காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினா ல் தான், உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினா ல், ஒற்றை தலைவலியில் இருந் து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
காது வலி – பூண்டு எண்ணெய்:
காதுகளில் வலி ஏற்பட்டால், அப்போது பூண்டுகளை தட்டி, கடுகு எண் ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற் றினால், உடனே வலி நீங்கிவிடும்.
பல் வலி – கிராம்பு:
சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புக ளை, அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால், பல் வலி போய் விடும்.
தசைப் பிடிப்பு – வெதுவெதுப்பான நீர் குளியல்:
உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டா ல், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தா ல், பிடிப்புக்கள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய் தது போன்றும் இருக்கும்.
மாதவிடாய் பிடிப்புக்கள் – தயிர்:
தயிரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால், அது மாதவிடாயின்போது ஏற் படும் தசைப்பிடிப்புக்களை சரிசெய்யும். அதிலும் அந்நேரத்தில் தினமும் 2 கப் தயிர் சாப்பிட வேண்டும்.
பாத வலி – உப்பு:
நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும்போது பாத வலி யால் அவஸ்தை ப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பி ணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப் போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு, வீக்கமும் குறையும்.
முதுகு வலி – திராட்சை:
முதுகுவலியின்போது திராட்சை சாப்பிட்டால், உட லில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக் கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகுவலியில் இருந்து நிவாரணம்பெறலாம் .
வீக்கத்தை குறைக்கும் – மஞ்சள்:
மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதி கம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கல ந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமான து தணியும்.
மூட்டு வலி – செர்ரிப் பழங்கள்:
மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குண மாக்கும்.
நெஞ்செரிச்சல் – ஆப்பிள் சீடர் வினிகர்:
அசிடிட்டியினால் ஏற்படும் நெஞ்செரிச்சலின் போது, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்ல தண்ணீரில் கல ந்து, சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கவேண்டும். இதனால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் சரியாகும்.
கால் பிடிப்பு – தக்காளி:
இரவில் கடுமையான கால் பிடிப்பு ஏற்படு கிறதா? அப்படியானால், உணவில் தக்காளி யை அதிகம் சேர்த்தால், அதில் உள்ள பொ ட்டாசியம் கிடைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவு ம்.
அடிவயிற்று வலி – மீன்கள்:
மீன்களில் சால்மன் அல்லது டூனா போன்ற மீன்களில் ஒமேகா-3 ஃபேட் டி ஆசிட் அதி கம் உள்ளது. இது வயிற்றில் உள்ள புண்க ளை சரிசெய்ய க்கூடிய சக்தி கொண்டவை. எனவே இத்தகைய மீன்களை அதிகம் சாப் பிட்டால், அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிக்கலாம்.
சிறுநீரகப் பாதை தொற்று – ப்ளூபெர்ரி:
சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்பட்டிருந்தால், அத் தகையவர்கள் ப்ளூபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, அந்த பிரச்சனையை சரிசெய்யும்.
மாதவிடாய் வயிற்று வலி – ஓட்ஸ்:
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலியை சரி செய்ய, ஓட்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே தினமும் 1 கப் ஓட்ஸை காலை யில் சாப்பிடுங்கள்.
வாயுத் தொல்லை – அன்னாசி:
வாயுவினால் ஏற்படும் வயிற்று வலியை தவிர்ப்பதற்கு, அன்னாசியை சாப்பிட்டு வந்தால், அன்னாசி வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வயிற்றில் வாயு சேர்வ தைத் தடுக்கும்.
மார்பக வலி – ஆளி விதை:
மார்பக வலி ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆளி விதைகளை உணவில்சேர்த்தால், அது அந்த வலி யை கட்டுப்படுத்தும்.
தசைப் புண் – புதினா:
அதிகப்படியான வேலைப்பளுவால் தசைகள் அளவுக்கு அதிகமாக வலிக்க ஆரம்பித்தால், அப்போது வெதுவெது ப்பான நீரில் சிறிது புதினா எண்ணெய் சேர்த்து குளித்தா ல், அது வலியைக் குறைத்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...