Wednesday, June 28, 2017

ஏன் இன்ஜினியரிங் படிக்கிறீர்கள்????

இனியும் இன்ஜினியரிங் படிக்க வேண்டாம்!!!!
இந்த பதிவு முழுமையாக இன்ஜினியரிங்
படித்த மாணவ மாணவிகளுக்காக மட்டுமே...
சற்று நீளமான பதிவு தான் ஆனாலும் நீங்கள்
படித்த நான்கு வருடத்தை விட மிகவும்
சிறியது தான்...
ஏன் இன்ஜினியரிங் படிக்கிறீர்கள் என்ற
கேள்விக்கு இன்று பலரிடம் இருந்து வரும்
ஒரே பதில் நல்ல வேலை கிடைக்கும் என்பதே.
ஆனால் அவர்கள்
படித்து முடித்து கூறுவதோ இன்ஜினியரிங்
வேண்டாம் என்பதே. ஏனென்றால் இன்று பல
இன்ஜினியரிங் படித்த மாணவர்கள்
வேலை இல்லாமலும் படித்த படிப்பு இல்லாமல்
வேறு வேலையும் தான் பார்த்துக்கொண்ட
ு இருகிறார்கள். வேலைக்காக மட்டும்
இன்ஜினியரிங் படித்தால் இதுதான் இன்றைய
நிலைமை.
சில வருடங்கள் முன் இன்ஜினியரிங் படித்தால்
அவர்களை CREATORS என்று சொல்லுவார்கள்
காரணம் அவர்கள் படித்த துறையில் பல புதிய
விஷயங்கள் கண்டுபிடித்தனர். இன்றும்
கண்டுபிடிகின்றனர் ஆனால் இந்தியாவில்
அதிகம் இல்லை. ஏனென்றால் நம் எண்ணம்
முழுவதும் நல்ல MNC கம்பனியில்
வேளைக்கு செல்ல வேண்டும் என்பதே.
யாரோ ஒருவனின் கனவு நிறைவேற
வேண்டும் என்பதற்காக உங்கள் திறமையும்
உழைப்பையும் செலவிடாதிர்கள்.
உங்களுக்கென
ஒரு கனவை உருவாக்கிகொள்ளுங்கள்.
அதை நோக்கி செல்லுங்கள் உங்களிடம் பலர்
வேலை செய்யும்
சூழலை உருவாக்கி கொள்ளுங்கள்.
அப்போது தான் நீங்கள் இன்ஜினியரிங் படித்தவர்
என்று பெருமையாக சொல்லிகொள்ள
முடியும்.
கல்லூரி படிக்கும் போது Mech DA, EEE DA, ECE
DA, IT DA, CSE DA, Civil DA என்று காலர் தூக்கிவிட்ட
சிலரின் வாழ்க்கை கல்லூரி முடிந்த
பிறகு எதோ ஒரு BPO KPOவில்
கைகட்டிகொண்டு போகிறது. மெக்கானிக்கல்
இல்லாமல் எலெக்ட்ரிக்கல் இல்லை, எலெக்ட்ரிக்கல்
இல்லாமல் எலெக்ட்ரானிக் இல்லை,
எலெக்ட்ரானிக் இல்லாமல் கம்ப்யூட்டர்கள்
இல்லை என்பதை அணைத்து இன்ஜினியரிங்
படிக்கும் மாணவர்களும் புரிந்து கொள்ள
வேண்டும்.
ஒரு நடிகனை கடவுளாக நினைக்கும் நீங்கள்,
படிப்பை கடவுளாக அல்ல படிப்பாக பாருங்கள்.
ஒரு நடிகனை கேலி செய்ய நீங்கள் யோசிக்கும்
மூளையை சற்று புதிய கண்டுபிடிப்புகள
ுக்கு யோசியுங்கள்.
ARREAR இருக்கு எனக்கு இன்ஜினியரிங்
வராது என்று காரணம் கூறும்
பலருக்கு ஒரு சிறிய கேள்வி, நீங்கள்
நான்கு வருடம் படித்தது அந்த
மூன்று மணி நேர பரீட்சை தான்
முடிவு செய்ய வேண்டுமா? நீங்கள் படித்த
படிப்பு நீங்கள் எடுக்கும் மதிப்பெண்
எல்லாமே உங்கள் அடையலாம்
மட்டுமே அது உங்களை நீங்கள் யார்
என்று முடிவு செய்யாது.
மெக்கானிக், எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக்
படித்து விட்டு IT கம்பனில் வேலை செய்ய
காரணம் என்ன அங்கு சம்பளம் அதிகமாக
கிடைக்கும் என்பதாலா, அந்த பணம்
உங்களுக்கு நிம்மதி தருகிறது என்றால் நீங்கள்
உங்கள் படிப்பிற்கு துரோகம்
செய்து கொண்டு இருக்கிறிர்கள். அதனால் பல
அறிய கண்டுபிடிப்புகள் அழிந்து போகிறது.
இன்ஜினியரிங் படித்தால் எங்கும்
பிழைத்து கொள்ளலாம் ஆனால் நம்
கனவு அது அல்ல. உங்களுக்கு ITஇல் தான் ஆர்வம்
என்றால் தடுக்கவில்லை IT MECHANIC
இணைந்து புதிய கண்டுபிடிப்புகள்
கொண்டுவாருங்கள்.
இன்று 90% எடுத்தவன் வீட்டில் இருக்கிறான் 60%
எடுத்தவன் வேலை செய்கிறான்,
அதற்கு காரணம் அவன் இன்ஜினியரிங்
கற்றுகொண்டான் படிக்கவில்லை. உலகம்
வேகமா ஓடுகிறது இந்த காலத்தில்
SYLLABUSஇல் இருப்பதை மட்டுமே படித்தால்
உங்களால் வேகமா ஓட முடியாது.
சுதந்திரம் பெற்ற பிறகும் ஆங்கிலேயர்கள் கிட்ட
அடிமையாக தான் இருக்கிறோம் IT PEOPLE
என்று கூறிக்கொண்டு, அந்த நிலை மாற
வேண்டும் என்றால் அது இனிவரும்
இன்ஜினியரிங் மாணவர்கள் கையில் தான்
உள்ளது. உங்கள் கனவை உருவாக்கிகொள்ளு
ங்கள், உங்களிடம் பலர் வேலை செய்ய வேண்டும்
என்று ஆசை கொள்ளுங்கள்.
இனியும் இன்ஜினியரிங் படிக்காதிர்கள்,
கற்றுக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...