Tuesday, June 27, 2017

இழிநிலை தவிர்க்க இறுதிவரை போராடு.....

எனது "இழிநிலை தவிர்க்க இறுதிவரை போராடு" கவிதைக்காக வெற்றிச்சான்றிதழ்
இழிநிலை தவிர்க்க இறுதிவரை போராடு
மனம் தளராமல்
இறுதி வரை போராடு...
இனிக்கும் வெற்றி
உனக்காக காத்திருக்கிறது...
வாழ்க்கைப்போட்டியில்
தடைகற்கள் குவிந்திருக்கலாம்..
அதை தகர்த்து எறிந்து
நம்பிக்கையோடு ஓடு...
பல வேகத்தடைகளில்
நீ விழுந்திருக்கலாம்...
கடந்திருக்கலாம்...
விழுந்து இடத்தில்
விவேகமாய் எழுந்து காட்டு...
உனைப்பார்த்து கைகொட்டிச்சிரித்த
இதே உலகம் முன்
உன் முயற்சியால்
நிமிர்ந்து காட்டு..
உனை நோக்கி வந்த
ஏளனன மொழிகளை
உன் நேர்மறை சிந்தனையால்
தவிடுபொடியாக்கிடு....
உனது குறிக்கோள்
வெற்றியை அடைய
வெற்றி உனை அடைய
விடாமல் முயற்சி செய்...
அகமகிழ தினந்தோறும்
பயிற்சி செய்...
போராடு...போராடு...
இழிநிலை தவிர்க்க மட்டுமல்ல...
இனிய நிலைய அடையவும்
இறுதி வரை போராடு...
வெற்றி உனக்காகவே
தவம் கிடக்கிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...