Saturday, February 16, 2019

ராகு கேது பெயர்ச்சி : 2019-2020...

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி :
👉ராகுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 1ஆம் தேதியான  13.02.2019 புதன்கிழமை பகல் 01.25 மணிக்கு புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதமான மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
👉கேதுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 1ஆம் தேதியான  13.02.2019 புதன்கிழமை பகல் 01.25 மணிக்கு உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதமான தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி :
👉ராகுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 22ம் தேதி பின்னிரவு (அதிகாலை) 5.46 மணிக்கு அதாவது 07.03.2019 அன்று புனர்பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாதமான மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
👉கேதுபகவான் விளம்பி வருடம் மாசி மாதம் 22ம் தேதி பின்னிரவு (அதிகாலை) 5.46 மணிக்கு அதாவது 07.03.2019 அன்று உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதமான தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
👉ராகு கேது பெயர்ச்சியால் நிகழ இருக்கும் இன்னல்களும், தடைகளும் குறைய ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.
மேஷம் :
👉ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமைதோறும் வழிபட்டு வர முயற்சியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.
ரிஷபம் :
👉திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் சுவாமியை வழிபட தடைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
மிதுனம் :
👉வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.
கடகம் :
👉திருச்செந்தூரில் உள்ள மூவர் ஜீவ சமாதிகளை வழிபட்டு வர நினைத்த காரியம் ஈடேறும்.
சிம்மம் :
👉தினமும் காலையில் விநாயகரை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.
கன்னி :
👉சித்தர்களையும், குருமார்களையும் வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர மனோதைரியம் மேம்படும்.
துலாம் :
👉திருவெண்ணைநல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரரை வழிபட்டு வர முன்னோர்களின் ஆசிகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள்.
விருச்சிகம் :
👉திருமருகலில் உள்ள இரத்தினகிரீசுவரரை வழிபட்டு வர அபிவிருத்தியும், சுபிட்சமும் உண்டாகும்.
தனுசு :
👉சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட சிந்தனைத் தெளிவு உண்டாகும்.
மகரம் :
👉துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் ராகு நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் குறையும்.
கும்பம் :
👉வெள்ளிக்கிழமைதோறும் கருமாரி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர இன்னல்கள் மற்றும் கவலைகள் குறையும்.
மீனம் :
👉திருவண்ணாமலை, திருக்குரங்கனில் முட்டத்தில் உள்ள வாலீஸ்வரரை வழிபட்டு வர தடைகள் நீங்கி உயர்வும், மேன்மையும் உண்டாகும்.
***************************************

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...