தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்து முடித்ததும், அவசர அவசரமாக, டில்லி சென்றுள்ளார். அவரது பதவி தப்புமா என்பது, டில்லியில், இன்று நடக்கும் கூட்டத்திற்கு பின் தெரிய வரும் என, காங்., வட்டாரத்தில் கூறப்படுகிறது.'என் தலைமையில் தான், தமிழக காங்கிரஸ், லோக்சபா தேர்தலை சந்திக்கும்; தலைவர் மாற்றம் கிடையவே கிடையாது' என, டில்லி பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத் ஆகியோர் முன்னிலையில், திருநாவுக்கரசர், சமீபத்தில் பேசியிருந்தார்.அவரது பேச்சால் அதிருப்தி அடைந்த, எதிர்கோஷ்டி தலைவர்கள், டில்லியில் முகாமிட்டு, திருநாவுக்கரசரை மாற்றுமாறு, காங்., தலைவர் ராகுலிடம் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையில், தேர்தல் பணிகள் தொடர்பாக, தமிழக, காங்., சார்பில், ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, தேர்தல் பணிக் குழு என, நான்கைந்து குழுக்களை அமைக்க, திருநாவுக்கரசர் திட்டமிட்டுள்ளார். அக்குழுக்களுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை தயார் செய்து, மேலிட ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார்.அந்த பட்டியலில்,இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆதரவாளர்கள் இடம்பெறவில்லை. இதுபற்றி புகார் வந்ததும், எல்லா தரப்பும் இடம்பெறும் வகையில், பட்டியலை புதுப்பித்து தரும்படி, ராகுல் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், திருநாவுக்கரசர், தன் குடும்பத்தினருடன், சீரடி சென்று, சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்தார். தன் பதவியை தக்க வைக்க வேண்டியும், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, எம்.பி.,யாக வேண்டியும் பிரார்த்தனை செய்து உள்ளார்.சென்னை திரும்பியதும், அவரை, டில்லி புறப்பட்டு வரும்படி, மேலிட தலைவர்கள் அவசர அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம், திருநாவுக்கரசர் டில்லி சென்றார்.ஏற்கனவே, அங்கு, சிதம்பரம், சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட சிலர் முகாமிட்டுள்ளனர்.டில்லியில், இன்று மேலிட தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், தமிழக, காங்., தலைவர் பதவியில், திருநாவுக்கரசர் தொடர்ந்து நீடிப்பது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. மேலும், திருத்தப்பட்ட தேர்தல் பணிக் குழுக்கள் பட்டியலுக்கும், திருநாவுக்கரசரிடம் ஒப்புதல் பெறப்படுகிறது.திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறுகையில், 'தமிழக, காங்., தலைவராக, தொடர்ந்து திருநாவுக்கரசரே நீடிக்கவும், தேர்தல் குழுக்கள் பட்டியல் குறித்து, அவரிடம் விவாதிக்கவுமே, டில்லிக்குஅவர் அழைக்கப்பட்டு உள்ளார். 'மற்றபடி, அவரை மாற்றும் திட்டம் இல்லை' என்றனர்.இன்று இரவு, திருநாவுக்கரசர், சென்னை திரும்புகிறார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment