கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா, நாளை (ஜன.,31) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27ல், விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்றுடன் சசிகலாவிற்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. செயற்கை சுவாசமின்றி சுவாசித்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களும், சசிகலா டிஸ்சார்ஜ் ஆகலாம் என பரிந்துரை செய்ததை தொடர்ந்து, அவர் நாளை(ஜன.,31) டிஸ்சார்ஜ் ஆக உள்ளார். வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment