Wednesday, January 13, 2021

*வி.பி. சிங் செய்த மாபெறும் தவறு* The blunder inefficiency of V.P. Singh.

 “பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.

ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த *மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்*
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அவர்களின் மனைவிகளும், பெண்களும் கற்பழிக்கப் பட்டார்கள். அவர்களின் கண் முன்பே அவர்களின் குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள்.
காஷ்மீரின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவரான டீப்பாலால் டக்ரூ நடுத்தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். குற்றுயுராகத் துடித்துக் கொண்டிருந்த அவரது உடலைச் சுற்றி நான்கு பக்கமும் மோட்டார் பைக்குகள் சுற்றிக் கொண்டிருந்தன. “காஃபிரான” டக்ரூவுக்குத் தண்ணீர் கொடுப்பவர்களும் காஃபிர்களாகக் கருதிக் கொல்லப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டார்கள்.
இந்தக் கொடுமைகளைக் கண்டு முஃப்தி முகமதுவோ அல்லது அவரது மகளோ சிறிதும் கண்ணீர் சிந்தவில்லை. ஏன், ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை காஷ்மீரி முஸ்லிம்கள் அதனைக் குறித்துப் பேசுவதும் இல்லை.
இந்தச் சம்பவங்கள் திடீரென நடந்து விடவில்லை. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டன என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
இதே காலகட்டத்தில் திடீரெனெ இந்திய உள்துறை மந்திரியின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன.
சகோதரர்களே, இதனைக் குறித்து வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதியிருப்பதனை கூகுளில் தேடிப் படியுங்கள். ஏனென்றால் அந்தப் பெண்ணை எந்தத் தீவிரவாதியும் கடத்திச் செல்லவில்லை. அவள் முஃப்தி முகமதின் வீட்டுக்குள்ளேதான் இருந்தாள் என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.
தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளரான முஃப்தியே இந்தக் கட்டுக் கதையைக் கட்டவிழ்த்துவிட்டார். அதனை உபயோகித்து இந்தியா அதுவரை பிடித்துவைத்திருந்த பல காஷ்மீரி தீவிரவாதிகளை (நான்கு) விடுதலை செய்ய உபயோகித்துக் கொண்டார் முஃப்தி. அவருக்கு இருந்த தீவிரவாதி பாசத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் மதத்தைக் குறித்து, அவர்களின் மதக் கொள்கைகளைக் குறித்து, தீவிரவாதக் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு இருக்கும் பிடிமானத்தைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இங்கு நான் வலியுறுத்துவது.
இது சாதாரண விஷயமில்லை. அதுபோலவே காஷ்மீரைச் சேர்ந்த “செக்குலர்” காஷ்மீரியான குலாம் நபி ஆசாத்தைக் குறித்தும் இங்கு கூற வேண்டும்.
திடீரென அவரது வீட்டிலும் ஒரு உறவுக்காரப் பெண் இதேநேரத்தில் திடீரெனெ காணாமல் போய்விட்டாள்! உடனடியாக முஃப்தி 27 காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய, சாயங்காலம் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்! எவ்வளவு பெரிய அதிசயம்!!
இவர்களின் துல்லியமான திட்டமிடல் காரணமாக, ஒன்றின் பின் ஒன்றாக இடைவெளியில்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டே இருந்தன.
குலாம் நபிக்கு அடுத்து புரெஃபஸர் 'சைஃபுதின் சோஸ்' இன் உறவுக்காரப் பெண்ணும் “திடீரென” காணாமல் போய்விட்டாள்! அவர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அந்த முஸ்லீம் காஷ்மீரிப் பெண்ணுக்கு பதிலாக ஏழு தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி. மந்திரம் போட்டது போல அந்தப் பெண்ணும் சாயந்தரமே வீடு வந்துவிட்டாள்!! இவை அனைத்தும் நடந்து விட்ட வரலாறு.
நண்பர்களே, மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர் தீவிரவாதத்தை மிகவும் உக்கிரமாக்கி, பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாதம் செய்வதற்கு வழிகாட்டியவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது முஸ்லிம் உள்துறை அமைச்சரான முஃப்தி முகமது சையதுதான் என நான் உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.
அவருக்குப் பின்னர்தான் காஷ்மீரில் தீவிரவாதம் மிக உச்ச நிலையை எட்டியது.
மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களைக் குறித்து ஏகப்பட்ட சப்தமெழுப்பின இந்திய ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும்.
அவர் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு அளவில்லை. அவருக்கு அமெரிக்க விசா தரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது வெறுப்பினைக் கொட்டின எதிர்க்கட்சிகள்.
அதேசமயம் இந்தியக் குடிமக்களான காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் சொந்த இடத்திலிருந்து அகதிகளாக விரட்டப்பட்டபோது உதவாகரை பிரதமராக இருந்தவர் வி.பி.சிங்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...