பலமணி நேரவலிக்கு பிறகு பிறந்த தன் ஆண் குழந்தையை மெதுவாக தொடுகிறார் பெற்றவள். அவர் முகம் முழுவதும் புன்னகை.தான் மறு பிறவி எடுத்ததாக அவர் உணர்கிறார். அறுவை சிகிச்சை வேண்டாம், சுகப்பிரசவத்திற்காக காத்திருந்து குழந்தை பெற்றிருக்கிறார். குழந்தை நலன், எடை, குழந்தை யார் மாதிரி என்ற பலகேள்விகளோடு மாமியாரும், மாமனாரும் அறைக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் கேட்ட முதல் கேள்வி, குழந்தையின் நிறம் குறித்துதான். பெற்றவளின் தாயிடம், குழந்தை வயிற்றில் இருக்கும்போது குங்குமப்பூ கலந்த பால் கொடுத்தீர்களா இல்லையா? குங்குமப்பூ கலந்த பால் கொடுத்திருந்தால் குழந்தை இவ்வளவு கறுப்பாக பிறந்திருக்க மாட்டானே? மேலும் தன் மகளுக்கு குங்குமப்பூ கலந்த பால் கொடுத்ததால் சிவப்பான குழந்தை பிறந்ததாக கூறினார். இந்த பேச்சுவார்த்தை கடைசியில் சண்டையில் போய் முடிந்தது.
குங்குமப்பூ பாலை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குடிப்பதற்கும், சிவப்பாக குழந்தை பிறப்பதற்கும் சம்மந்தமும் இல்லை அதற்கான காரணம்;-
ஒருவரது தோலின் நிறம், அக்குழந்தையின் பெற்றோர், அவரது மரபணுக்கள், மெலனின் உற்பத்தி ஆகியவற்றை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. "மெலனின் அதிகமாக இருப்பவர்களின் தோல் நிறம் கருமையானதாகவும், மெலனின் குறைவாக இருக்கும் நபர்கள் சிவப்பாகவும் இருப்பார்கள்"
மேலும், சூரியனும் நம் தோல் நிறத்தை பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து மெலனின் நம் தோலை பாதுகாக்கிறது.பொதுவாக பூமத்திய ரேகைக்கு அருகில் வசிக்கும் மக்களின் தோல் நிறம் கறுப்பாக இருக்கும். பூமத்திய ரேகைக்கு தொலைவில் இருக்கும் மக்கள் (உதாரணமாக மேற்கத்திய நாடுகள்) வெள்ளையாக இருப்பார்கள்.
சிந்திப்போம்!
No comments:
Post a Comment