Thursday, November 28, 2019

மானஸ்தனின் மகள்.

🍁🍁🍁🍁🍁
🍁
🍁
🍁 அரசு பங்களாவை காலி செய்கிறோம்!
🍁 கருப்புப் பூனை படை பாதுகாப்பும் வேண்டாம்!
🍁
🍁 --- வாஜ்பாய் மகள்!
🍁
🍁🍁🍁🍁🍁
🍁 தனது தந்தை வாழ்ந்து வந்த கிருஷ்ண மேனன் மார்க் அரசு பங்களாவை காலி செய்து விட்டு சொந்த வீட்டிற்கு குடியேற விரும்புவதாக
பிரதமரின் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் வாஜ்பாயின் வளர்ப்பு மகள்
நமிதா பட்டாச்சார்யா!
அத்துடன் , முன்னாள் பிரதமரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் தங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கும் SPG பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்!
😀 சொந்த வீடு இருந்தால் தான் என்ன?
அதை வாடகைக்கு விட்டு விட்டு முக்கிய பிரமுகர்கள் வாழும் பகுதியில் - அரசு பங்களாவில்
வாழ்வது தானே நமது அரசியல் வாரிசுகளின் வழக்கம்!
இன்னும் ஒரு படி மேலே போய் , வாஜ்பாய் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து விட்டு
அதற்கு அரசிடமிருந்து நிதியையும் வாங்கிக் கொண்டு --
வாஜ்பாய் வாழ்ந்த வீட்டை அறக்கட்டளை சார்பில் நினைவு இல்லமாக
மாற்றி பரம்பரை சொத்தாக வைத்துக் கொள்வது கூட வழக்கத்தில் இருக்கிறதே!
கடைத்தெருவிற்கு போகும் போது...
கல்யாணம் காட்சி என்று நாலு இடங்களுக்கு போகும் போது....
பிள்ளைகள் பள்ளிக் கூடம் கல்லூரி போகும் போது வரும் போது கருப்புப் பூனை படை சூழ
நடமாடுவது தானே பெருமை?
இது எதுவுமே வேண்டாம் என்கிறது இந்த குடும்பம்?
கொஞ்சம் அசடு தான் போல 😀!
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...