Wednesday, November 27, 2019

கருணாநிதி செய்த ஊழல்கள் எந்த கொம்பனாலும் நிரூபிக்க முடியாது!

திரு. கருணாநிதி விஞ்ஞான முறையில் ஊழல் புரிந்தார் என யார் கூறியது? ஆதாரத்தோடு விடையளிக்க முடியுமா?
Ans:
கருணாநிதி ஊழல் என்பது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மாதிரி! அவ்வளவு லேசில் புரியாது! ஊழல் கண்முன்னே தெரியும் ஆனால் நிரூபிக்க முடியாது! இதைத்தான் ஜஸ்டிஸ் சர்க்காரியா விஞ்ஞான முறைப்படி ஊழல் என்று அழைத்தார்!
எழுபதுகளில் சர்க்காரியா கமிஷன் திமுக செய்த ஊழல்களை ஆராய ஆரம்பித்து திகைத்துப் போனது! இப்படி கூட எல்லோரையும் ஏமாற்றி ஊழல் செய்ய முடியுமா, என்று மலைத்துப் போய் கருணாநிதிக்கு ஊழல் செய்வதில் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள்!
கருணாநிதி செய்த ஊழல்கள் எந்த கொம்பனாலும் நிரூபிக்க முடியாது! அதை விளக்க கூட யாராலும் முடியாது! ஆனால் நான் உங்களுக்கு விளக்குகிறேன்! ஏனென்றால் அவர் இப்போது உயிரோடு இல்லை! இருந்தால் எனக்கு பார்ப்பனர் பட்டம் கட்டியிருப்பார்!
இதோ நான் உங்களுக்கு ஒரு உதாரணம் மூலம் திமுகவினர் கருணாநிதி ஸ்டைலில் எப்படி ஊழல் செய்வார்கள் என்று விளக்குகிறேன்! உதாரணமாக ஒரு கற்பனையாக சூழ்நிலை விளக்குகிறேன்! அப்போது தான் புரியும்!
தமிழ்நாடு அரசுக்கு 1000 கம்ப்யூட்டர் வாங்க வேண்டும்! 1,000 கம்ப்யூட்டர் வாங்கி ஆயிரம் ஊழியர்களுக்கு டிரெய்னிங் கொடுக்க வேண்டும்! இதற்கு ஒதுக்கப்பட்ட பணம் 100 கோடி என்று வைத்துக்கொள்ளுங்கள்:!
கருணாநிதி தலைமையிலான அரசு 10 கோடிக்கு கம்ப்யூட்டர் வாங்கும்! பில் ரசீது பேங்க் அக்கவுண்ட் எல்லாம் சரியாக இருக்கும்! நீங்கள் வருடக்கணக்கில் ஆராய்ச்சி செய்தாலும் ஒரு சின்ன தவறு கண்டுபிடிக்க முடியாது!
இப்போது டிரெய்னிங் கொடுக்க வேண்டுமல்லவா! அதற்கு 90 கோடி செலவு செய்வார்கள்! எப்படி என்றால் ஆயிரம் ஊழியர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் " சூரியன் கம்ப்யூட்டர் நிறுவனம்" என்று ஒரு கம்பெனி தமிழ்நாடு அரசு உடன் காண்ட்ராக்ட் ஒன்று ஏற்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்!
ஒரு வாரம் பயிற்சி சர்டிபிகேட் கொடுப்பதற்கு உதயநிதி கம்ப்யூட்டர் நிறுவனம் ஒரு நபருக்கு 900 ரூபாய் கட்டணம் வசூலிக்கும்! டாடா நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இரண்டும் 5000 10,000 கேட்கும்! நம் உதயநிதிஸ்டாலின் நிறுவனம் ஆயிரம் ரூபாய் கேட்டு கருணாநிதி இந்த கட்டணத்தை 900 ரூபாய் என்று குறைத்து கையெழுத்துப் போடுவார்!
மேடை தோறும் நூறு ரூபாய் மிச்சம் செய்துவிட்டதாக திமுகவினர் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்! ஆனால் உண்மையில் அந்த ஒரு வாரம் கம்ப்யூட்டர் பயிற்சி என்று ஒன்றுமே நடக்காது! சர்டிபிகேட் பட்டம் கொடுத்திருப்பார்கள்! 900 ரூபாய்க்கு ரசீதும் கொடுப்பார்கள்!
ஒரு வருடம் கழித்து கம்ப்யூட்டர் தூசி படிந்து உபயோகிக்க ஆளில்லாமல் இருக்கும்! அரசு ஊழியர்களுக்கு அந்த கம்ப்யூட்டரை உபயோகிக்கவே தெரியாது! பழையபடி பேப்பர் பேனாவை வைத்து எழுதிக் கொண்டிருப்பார்கள்!
100 கோடி செலவு செய்து என்ன பயன் நீங்கள் 90 கோடி உங்கள் குடும்பத்திற்கு சேர்த்துள்ளீர்கள் என்று நீதிபதி கேள்வி கேட்டால்" நீதிபதி ஒரு பார்ப்பனர்!" கம்ப்யூட்டர் வாங்கியதற்கு கணக்கு இருக்கு , தமிழில் கம்ப்யூட்டர் பாடம் எடுத்ததற்கு கணக்கு இருக்கிறது! என்று பதில் வரும்!
ஒரு பார்ப்பனர் நீதிபதி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தமிழில் கம்ப்யூட்டர் பாடம் எடுத்தது பிடிக்காததால் ஊழல் புகார் சொல்கிறார்! கடைசியில் அந்த நீதிபதி மன்னிப்பு கேட்பார்!
மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்து " பெரியார் அண்ணா கம்ப்யூட்டர் தமிழ் வழி பயிற்சி" என்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு புது திட்டம் ஒன்று போடுவார்கள்! உதயநிதி ஸ்டாலின் கம்பெனி பில்கேட்ஸ் உடன் இணைந்து இந்தமுறை கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கும்! உங்களால் எந்த ஊழலையும் நிரூபிக்க முடியாது! எல்லாவற்றிற்கும் ரசீது இருக்கும்!
உதயநிதி ஸ்டாலின் புதிதாக வீடு ஒன்று வாங்கி பெரிய பட்ஜெட்டில் நயன்தாராவை வைத்து படமொன்று எடுப்பார்! கருணாநிதிக்கு " செம்மொழி கம்ப்யூட்டர் வித்தகர்" என்றும் உதயநிதிக்கு " கம்ப்யூட்டர் கொடைவள்ளல்" நயன்தாராவுக்கு ' கம்ப்யூட்டர் கலைவாணி" என்று அரசு சார்பில் விழா எடுத்து பட்டங்கள் வழங்கப்படும்! கலைஞர் தொலைக்காட்சி இதை நேரடியாக ஒளிபரப்பும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...