Tuesday, May 25, 2021

சிறுபான்மையினர் கொலையே செய்தாலும் ஆதரிக்கும் கனிமொழி, திருமா, ஸ்டாலின், வைகோ.........

 பத்மசேஷாத்ரி_பள்ளி ஆசிரியன் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம் தான். அவனை தூக்கில் கூடப் போடலாம் தவறில்லை. அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

இதுவரை எந்த ஒரு பிராமணர்களோ அல்லது பிராமண சங்கங்களோ என யாரும் அந்த ஆசிரியனுக்கோ.. பள்ளிக்கோ வக்காலத்து வாங்கவில்லை.
ஆனால், அதற்காக பிராமணர்கள் நடத்தும் பள்ளி என்றும், ஹிந்துக்கள் நடத்தும் பள்ளி என்றும் சேற்றை வாரி இறைக்க, திராவிடக் கூட்டம் சதி செய்யுமானால் அதை இங்கே யாரும் ஏற்க முடியாது. அப்படியானால் அது முறியடிக்கக்பட வேண்டிய விஷயம்.
முதலாவதாக அந்த ஆசிரியர் பிராமணர் அல்ல. இரண்டாவதாக அந்த ஆசிரியர், தான் ஐந்து வருடங்களாக பாலியல் அத்துமீறல் செய்துவருதாக இன்று வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில், பள்ளி நிர்வாகம் அவர்மீது இதுவரை தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
மேலும், இந்த சம்பவத்தில் திராவிட இயக்கத்தினர் முதல் கனிமொழி, கோவை குண்டுவெடிப்பு ஜவாஹிருல்லா வரை ஆர்வமாக அறிக்கைகள் விடுவதிலிருந்து நமது சந்தேகம் அதிகமாகிறது.
சென்ற மாதம் பிரபல பாடகி #கல்பனாவின் மகள் சர்ச் பாதிரியாரால் கற்பழிக்கப்பட்டார்.
அப்போது கனிமொழி வாயே திறக்கவில்லை. ஏனெனில் தவறு செய்தவன் பாதிரி..!
இதே கூட்டம் இதற்கு முன்பு இங்கு நடந்த கிறிஸ்தவ ஆசிரியர்கள், பாதிரிகளின் கொடூரமான பாலியல் தாக்குதல்களின் பொழுது, ஏன் வாயை மூடி மௌனமாக இருந்தார்கள் என்றும் கேட்க வேண்டியுள்ளது.
மதுரை மாவட்டம் பொதும்பு அரசு பள்ளி ஆசிரியராக இருந்த #ஆரோக்கியசாமி என்பவன் மீது 2000ல் தி.மு.க ஆட்சியில் 13, 14 வயது சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததாக பல புகார்கள் எழுந்த பொழுது, தி.மு.க அரசு காதும், காதும் வைத்ததுபோல அவனை சமயநல்லூர் பள்ளிக்கு இடமாற்றம் மட்டுமே செய்து பெரும் தண்டனை கொடுத்தது. அதே ஆசிரியன் மீண்டும் 2011ல் அதே பொதும்பு பள்ளிக்கு தலைமையாசிரியனாக பதவி உயர்வு பெற்று வந்து, மீண்டும் 6 முதல் 8வது வரை படிக்கும் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்கள் செய்தது மட்டுமின்றி அதை வீடியோக்களாகவும் எடுத்து வெளியிட்டான்.
ஆனால், அவனை கைது செய்யாமல் 45 நாட்கள் ஒளித்து வைத்து காப்பாற்றியவர் #சகாயம்_IAS.
#பிருந்தாகாரத் போன்றவர்கள் அங்கே வந்து போராடிய பிறகு தான் பல நாட்களுக்கு பிறகு கைது செய்தார்கள்.
சென்ற ஆண்டு சென்னை #கிறிஸ்தவக்_கல்லூரி உயிரியல் துறை பேராசிரியர்கள் #ரவீன் மற்றும் #சாம்_மேனியல் மீது பல மாணவிகள் பாலியல் குற்றம் சாட்டிய நிலையில், இவர்களையும் எந்த திராவிட கட்சிகளும் கண்டிக்கவில்லை.
திருச்செந்தூர் அருகே தட்டார்மடம் பகுதியில் மாணவிகள் விடுதி நடத்தி வந்த #போதகர்_சௌந்தர்ராஜன் மற்றும் அவனது இரண்டு மகன்களான #ஜெபஸ்தியன்_கிறிஸ்டோபர் மற்றும் #ஜெயசிங் ஆகியோர் சேர்ந்து பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அவ்வளவு ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்பு மதுரை அருகே எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கான காப்பகத்தில் கூட இந்த கிறிஸ்தவ மிருகங்கள் பாலியல் கொடுமைகள் செய்த செய்தி வெளி வந்தது.
பெரியகுளம் பகுதியில் #இஸ்லாமிய_மதரஸாவில் விடுதியில் இருந்து தப்பிய இரண்டு மாணவிகள் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
இதேபோல ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகளை என்னால் ஆதரங்களுடன் கொடுக்க முடியும்.
உண்மையில் உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகளுடனும், கன்னிகாஸ்திரிகளுடனும் பாலியல் அத்துமீறல் செய்பவர்கள் கிறிஸ்தவ பாதிரிகளும், கிறிஸ்தவ ஆசிரியர்களும்தான் மிக அதிகம்.
ஆனால், ஹிந்துக்களால் நிர்வகிக்கப்படும் ஆயிரக்கணக்கான RSS பள்ளிகளிலும், விவேகானந்தா பள்ளிகளிலும், இராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் என்றுமே எப்போதுமே நடந்ததில்லை என்பதுதான் உண்மை.
இன்று பிராமணர் நடத்தும் பள்ளி என்பதால், அதை வைத்து ஹிந்துக்களை தாக்குபவர்கள், எவரவது ஒருவர் மேற்கண்ட சம்பவங்களில் சிறு கண்டனமாவது தெரிவித்துள்ளார்களா..?, அல்லது இன்று ஆர்வமாக 24 மணிநேரமும் செய்திகள் போடும் ஊடகங்கள் ஒன்றாவது மேற்கண்ட செய்திகளை பேசியதுண்டா..? -
சிறுபான்மையினர் கொலையே செய்தாலும் ஆதரிக்கும் கனிமொழி, திருமா, ஸ்டாலின், வைகோ
ஜ்வகருல்லா,
போன்றவர்கள் ஹிந்துக்கள் தும்மினால் கூட அதை கொலை குற்றமாக்க துடித்து கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் கூறுகிறேன். பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியன் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவனை தூக்கில் கூடப் போடலாம். தவறில்லை.
May be an image of 2 people and text that says 'NEWS 18 தமிழ் பொழுதுபோக்கு வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் சீறும் சின்மயி!! BY WEB DESK MAY 25, 2021 AT 10:32 PM'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...