Saturday, May 29, 2021

இப்படி எல்லாம் செய்துதான் தன் மகனை எம்எல்ஏ ஆக்கி இருக்கிறார்.

 தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார முழு ஊரடங்கு என அறிவிப்பு ! எந்த அரசு இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள் ! ஆனாலும் சிலர் நடந்து கொள்ளும் விதம்தான் வியப்பும் வேதனையையும் தருகிறது ! முன்னர் அதிமுக ஆட்சியில் இதே முழு ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டபோது வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா பெரும் ஓலமிட்டார் ! ஊரடங்குக்கு 5 நாள் அவகாசம் கொடுக்கவேண்டும் இல்லையெனில் வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றார் ! இப்போது பாதிக்கப்படாதா ? இவரே இன்று மதியம் முதல்வரை சந்தித்துவிட்டு இன்னும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்புள்ளது எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் மக்களுக்கு எந்த அசௌரியமும் இல்லாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம் ! மேலும் அவர் முதல்வர் கொரோனாவை பூண்டோடு ஒழிக்கவே இந்த ஊரடங்கை கொண்டுவந்திருக்கிறார் என்கிறார் ! பழனிச்சாமி மட்டும் கொரோனாவை மேலும் வளர்த்துவிடவா ஊரடங்கை கொண்டு வந்தார் ? அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு ! தன் சுயநலனுக்காக வணிகர் சங்கத்தை தவறாக பயன்படுத்துகிறார் ! இவரை இனிமேல் விக்கிரமராஜா என்பதற்கு பதிலாக அக்கிரம ராஜா என்று அழைக்கலாம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...