Sunday, May 30, 2021

கடன் எப்போது வரும்? எப்போது தீரும்?:

 கடன் எப்போது தீரும் என்பதை தெரிந்துக்கொள்ள கடன் எப்போது வரும் என்பதை முதலில் பார்த்துவிடலாம்.

பொதுவாக ஆறாமதிபதி தசாபுக்திகளில் கடன் ஏற்படும். ஆனால் ஆறாமதிபதி மட்டுமே கடனை கொடுத்துவிடவில்லை. கடனின் காரகரான சனியால் பாவத்துவமடைந்த தசாபுக்திகளும் லக்ன அசுபர்களின் தசாபுக்திகளும்கூட கடனை தரும்.
ஆறாமதிபதி தரும் கடனால் உயர்ந்தவரும் உண்டு. அதாவது வங்கிக்கடன் அல்லது நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் கடன்பெற்று தொழில்செய்து முன்னேற்றம் அடைவதற்கும் ஆறாமதிபதிதான் காரணம்.
இந்நிலையை ஆறாமதிபதி சுபர்களின் தொடர்பைபெற்று தசா நடத்தினாலோ ஆறாமிடம் சுபர்களின் தொடர்பை பெற்று லக்ன,ராசிக்கு யோகர்களின் தசா நடந்தாலோ ஏற்பட்டுவிடும்.
ஆறாமதிபதி புஷ்கராம்சத்தில் இருந்தால் ஆறாமிடத்தின் சுப பலன்களான கடலில் வளர்ச்சி,உத்தியோகமேன்மை, எதிரி,பினாமி போன்ற மறைமுக வலுமானம் போன்ற பலன்கள் நடக்கும்.ஆறாமதிபதி லக்னாதிபதியின் நண்பராக இருந்து சுபக்கிரக தொடர்பில் தசாநடந்தால் நல்ல பலன்கள் நடக்கும்.
இதற்கு மாறாக லக்ன எதிரியாக இருந்த ஆறாமதிபதி தசா நடந்தாலோ அல்லது பாவக்கிரகங்களின் தொடர்புபெற்ற தசா நடந்தாலோ அல்லது லக்ன அவயோகர்களின் தசா நடந்தாலோ கடன்,நோய் போன்ற தீயபலன்கள் நடக்கும்.
தசாபுக்தி சரியில்லாதபோது ஏழரைசனி ,அஷ்டம சனி நடந்தாலும் கடன் உண்டாகும்.
இயற்கை பாவக்கிரகங்களின் தொடர்பு கட்டாயமாக தீயபலன்களான நோய் கடன் முதலியவற்றை தரும்.
சரி,வந்தக்கடன் எப்போது தீரும்?
லக்ன சுபர்களின் தசாபுக்திகள் சுபக்கிரகங்களின் தொடர்புபெற்று வரும்போது கடன் தீரும். நல்ல தசாபுக்திகள் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
லக்னயோகர்களின் தசாபுக்திகள் நடைபெற்றால் மட்டுமே சம்பாதித்த பணம் கையில் தங்கும் அமைப்பு உண்டாகும். எனவே இந்நிலை வரும்போது கடன் இருக்காது.
தசாபுக்திகள் பாவக்கிரகங்களின் தொடர்போடு நடைபெற்றால் ஒரு கடன் தீர்ந்தால் மற்றொரு கடன் உண்டாகும் சூழ்நிலையும் பணத்தின் பற்றாக்குறை அடிக்கடி இருப்பதால் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும். பணத்தை சேமிக்க முடியாது.
ஆறாமிடத்தில் இயற்கை சுபக்கிரகங்கள் இருந்தாலோ பார்த்தால் வாழ்வில் ஒருமுறையாவது கடன்பிரச்னையை சமாளிக்கமுடியாமல் விழிபிதுங்கி நிற்க நேரிடும். லக்னாதிபதி வலுவாக இருந்தால் எத்தகைய கடன்பிரச்னையையும் சமாளித்து வந்துவிடலாம்.
ஏழரைசனி அல்லது அஷ்டம சனி ஆரம்பிப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பாக சொந்த தொழில் செய்ய ஆசை உண்டாகும். இதனால் ஏழரைசனி அஷ்டம சனி காலத்தில் தலைமறைவாக கடன்பிரச்னையால் கஷ்டப்பட நேரிடும்.
அடுத்துவரும் தசா லக்ன அசுபராகவோ பாவர்களின் தொடர்பிலோ வந்தால் தடப்பு தசாவே கடனை தந்து வரும் தசா முழுவதிலும் கடன்பிரச்னையை தந்துவிடும். அவயோகர்களின் தசாபுக்திகள் கடன்பிரச்னை தீராமல் பார்த்துக்கொள்ளும்.
கடன்பிரச்னையை சமாளிக்க பைரவரை தேய்பிறை அஷ்டமியில் தேங்காயில் நெய்விளக்கு ஏற்றி வணங்கி வரலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...