Wednesday, May 26, 2021

குருமகாசன்னிதானங்கள் கூட்டு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

 குருஞானசம்பந்தர்திருவடிகள் போற்றி தருமையாதின 27வது குருமணிகள் போற்றி நமசிவாயமூர்த்திகள் திருவடிகள்போற்றி 26வதுகுருமகாசன்னிதானம் திருவடிகள்போற்றி குமரகுருபரர் திருவடிகள்போற்றி திருப்பனந்தாள்மட அதிபர்திருவடிகள்போற்றி .தமிழ்நாட்டில்பலகோயில்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன.திருப்பணிகள்செய்யப்படாமல் உள்ளன.கோயில் சொத்துக்கள் பல ஆக்ரமிப்பில்உள்ளன.குத்தகைத்தொகை வசூலிக்கப்படாமல் உள்ளது.கோயில் நிலங்களில் மணல் கொள்ளை நடக்கிறது.கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை.மதமாற்றம்மற்றும் பல இடையூறுகள்.இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன்போன்ற பல தனி நபர்கள் நீதிமன்றங்களில் வழக்குத்தொடுத்து உள்ளார்கள்.கோயில் சொத்துக்கள் களவாடப்படுகின்றன.இந்துக்கடவுள்களையும்1இந்துமத நம்பிக்கைகளையும்,சமயநூல்களையும் மட்டும்பலர்(குறிப்பாக பகுத்தறிவு என்ற பெயரில்) இழிவு படுத்தி வருகின்றனர்.இந்துசமய அறநிலையத்துறை கோயில்கள்,மடத்துக்கோயில்கள் என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில்இந்து மத தலைவர்கள் @குருமகாசன்னிதானங்கள் தான்என்பது நிதர்சனமான உண்மை.@இந்துசமயத்தின் வழிகாட்டி/குருமார்கள் குருமகாசன்னிதானங்களே.இன்னும் பல. இவற்றிற்கெல்லாம் தீர்வு காண குருமகாசன்னிதானங்கள் கூட்டு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.இந்த அமைப்பின்மூலம் கோயில்கள் மற்றும்இந்துமதம் வளர்ச்சிகுறித்துஅரசுக்கு கோரிக்கைகள் வைக்கவேண்டும்.அரசுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் தேவைப்படும் இனங்களில் கண்டன அறிக்கை அனுப்ப வேண்டும். தேவைப்படின் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண வேண்டும்.இந்துசமய அறநிலையத்துறை உயர்மட்டக்குழுவைக்கூட்ட வலியுறுத்தவேண்டும்..இன்னும் பல உள்ளன.மதுரை ஆதினத்திற்கு நித்யானந்தாவால் இடையூறு எற்பட்டபோதுதருமபுர ஆதினத்தில் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.எனவே இதனை புதுப்பிக்க வேண்டும்.திருமையாதினம்,திருவாவடுதுறைஆதினம்,திருப்பனந்தாள்காசிமடஅதிபர் இதனை முன்னெடுக்க பணிந்து வேண்டுகிறோம்.நல்ல தீர்வை நம்புகிறோம்.இவண்:இந்துதிருக்கோயில்கள் பாதுகாப்புகூட்டமைப்பு மற்றும் திருமடங்களின் நலன் வேண்டுவோர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...