Friday, April 22, 2022

சரியான காரணங்களுடன் தான், இளையராஜா ஒப்பீடு செய்துள்ளார்.

 அம்பேத்கர், சட்டமேதை என அறிந்த பலருக்கு, அவர் தலை சிறந்த பொருளாதார நிபுணர் என்று தெரியாது. சமஸ்கிருதம் இந்த நாட்டின் தேசிய மொழியாக வர வேண்டும் என்றார் அவர். குறிப்பாக, கம்யூனிச சித்தாந்தத்தை வெறுத்தார். அம்பேத்கரின் கொள்கைப்படி பார்த்தால், இன்று தமிழகத்தில் உள்ள பலர், அவரைப் பற்றி பேச தகுதி அற்றவர்கள். தனக்கு தானே சிலை வைத்து கொள்ளும் அலட்டல் பேர்வழிகளின் வழித் தோன்றல்கள், அம்பேத்கரின் பெயரை வியாபாரம் ஆக்குகின்றனர். இவர்கள் அனைவரும் இப்போது, அம்பேத்கரின் ஏக போக வாரிசுகள் என்று நினைத்துக் கொண்டு, அம்பேத்கரையும், நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு, புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இசையமைப்பாளர் இளையராஜாவை சாடி வருகின்றனர். சரியான காரணங்களுடன் தான், இளையராஜா ஒப்பீடு செய்துள்ளார். ஆனால், தமிழகத்தில் சிலர் கண்ணை மூடியபடி, மோடியை வசைபாடிக் கொண்டே, அவர் செய்த புரட்சியால், நல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா தடுப்பூசி தயாரித்த சாதனையில், உலகில் அத்தனை நாடுகளும் மூக்கில் விரல் வைத்து வியந்து, மோடி அரசை பாராட்டுகின்றன. இங்குள்ள அன்னிய சக்திகளின் கைக்கூலிகளோ, மோடியின் தாடி நல்லா இருக்கிறது என்று கூட யாரும் சொல்லக் கூடாது என்ற, கேவலமான சிந்தனையை விதைக்கின்றனர். உலகில் இரு மனிதர்கள், ஏதாவது ஒரு கோணத்தில் ஒரே சிந்தனை பெற்று இருப்பர். அப்போது, யாராவது ஒருவர் அவர்களை கண்டுபிடித்து ஆவணப்படுத்துவார். அப்படி உருவானது தான் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம். அதற்கு முன்னுரை எழுதும் கருத்து சுதந்திரம் கூடவா இளையராஜாவுக்கு கிடையாது. வாழும் திருவள்ளுவர், வாழும் வேலு நாச்சியார் என்றெல்லாம், பொருத்தமில்லாத நபர்களுக்கு சந்தனம் தெளித்த நாடகக் கூட்டம், இளையராஜாவை வசைபாடுவது எந்த விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல. அப்படி வசைபாடும் நபர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... மோடியை எப்படியாவது வீழ்த்தி விடலாம் என்ற உங்களின் முயற்சிகள் எல்லாம், சூரியனை சுட்டெரித்து விடலாம் என்று தீக்குச்சி நினைப்பதற்கு சமமானது.***

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...