சமீபத்தில், நாகை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த கவர்னர் ரவி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளின் கார்கள் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட சில லெட்டர் பேடு கட்சிகளும், உதிரி கட்சிகளும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. உதிரி கட்சிகளை 'கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள்' என்று துாண்டி விட்டுட்டு, 'கவர்னருக்கு உரிய பாதுகாப்பை அளிப்பதில், இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது' என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசுவது, 'பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது' போல உள்ளது. முதல்வர் அவர்களே... உங்களின் இந்த மாய்மால பேச்சுக்களை எல்லாம், மக்கள் நம்புவர் என்று நினைக்க வேண்டாம். அத்துடன், தமிழகத்தில் ஏதோ அசைக்க முடியாத சக்தியாக இருப்பதாகவும் எண்ண வேண்டாம். 2011 முதல், 2021 வரை, 10 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்ததையும் மறந்து விடாதீர்கள். கூட்டணி கட்சிகளின் ஓட்டு, பொய்யான வாக்குறுதிகள் தான், உங்களை வெற்றி பெற வைத்தன. ஜெயலலிதா இருந்த போது, விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக, மக்கள் உங்கள் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியதை மறந்து விட்டீர்களா? அதேபோல, ஆர்.கே., நகர் தொகுதி இடைத்தேர்தலில், உங்கள் கட்சி டிபாசிட் இழந்தது ஞாபகம் இல்லையா? ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவரை மக்கள் அமோகமாக ஆதரித்ததற்கு, பயங்கரவாதம், வன்முறை, அத்துமீறிய போராட்டம், அராஜகம் போன்றவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதே காரணம். அமைச்சர்கள் சிறு தவறு செய்தாலும், அவர்களை பதவியிலிருந்து துாக்கி எறிய அவர் தயங்கியதில்லை. உங்கள் ஆட்சியிலோ, எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் இலாகா தான் மாற்றம்.இனியாவது, கடந்த கால சம்பவங்களை நினைத்துப் பார்த்து, அரசியல் சட்டப்படி கவர்னருக்கு தர வேண்டிய மரியாதையை தர, தமிழக அரசு முற்பட வேண்டும். அதை விடுத்து வன்முறையை கையில் எடுத்தால், மாநில அரசுகளை கலைக்க, முந்தைய காங்கிரஸ் அரசு பயன்படுத்திய சில சட்டப்பிரிவுகளை, தற்போதைய மத்திய அரசும் பயன்படுத்த நேரிடும் என்பதை மறக்க வேண்டாம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! ***
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment