Monday, April 18, 2022

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது.

 சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது
சமயபுரம் மாரியம்மன் கோவில்


















அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழாகடந்த10-ந்தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

நேற்று அம்மன் வெள்ளிகுதிரைவாகனத்தில்எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் அம்மன் தேரில்எழுந்தருளுகிறார். அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல்நிகழ்ச்சிநடைபெறுகிறது.தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரம், கிழக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அலங்கார விளக்குகளும்,மின்விளக்குகளும்பொருத்தப்பட்டுள்ளதால்சமயபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.

தேரோட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்றுஇரவுமுதலேசமயபுரம்வந்துகுவியதொடங்கினர்.ஏராளமான பக்தர்கள்  தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்  பாதுகாப்புபலப்படுத்தப்பட்டு உள்ளன.

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருச்சி, துறையூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக சமயபுரத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் உள்ள சக்தி நகர், பழைய பெட்ரோல் விற்பனை நிலையம், ஆட்டுச்சந்தை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டுசெல்லும்வகையில்அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறுஅமைப்புகளின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) அம்மன் வெள்ளிகாமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 21-ந்தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 22-ந்தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்பஉற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. 26-ந்தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்தில் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...